Sunday, 20 May 2012
Wednesday, 16 May 2012
மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம்
மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம்

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான நாள் நெருங்க நெருங்க, ரய்சினா குன்றத்தின் மீது அமைந்திருக்கும் அந்த நாள் வைஸ்ராய் மாளிகையான இந்நாள் குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரிக்கப் போவது யார் என்கிற எதிர்பார்ப்பு நாளும் கிழமையும் அதிகரித்து வருகிறது. 13வது குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்கப் போகிறவர் என்கிற பெருமைக்குரியவர் இன்னார்தான் என்று இன்னும் அறுதியிட்டுக் கூற முடியாத நிலைமைக்குக் காரணம், எந்த ஒரு கட்சியும், கூட்டணியும் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு வாக்குகள் பெற்றிருக்கவில்லை என்பதுதான்.
÷இப்படிப்பட்ட குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரிக்கப் போகும் இந்தியாவின் அடுத்த முதல் குடிமகன் யார் என்கிற சர்ச்சை வலுத்து வருகிறதே தவிர, அதன் பின்னணியில் சில மரபுகள் மீறப்படுவதும் அதன்மூலம் தென்னகம் வஞ்சிக்கப்படுவதும் வசதியாக மறக்கடிக்கப்படுகிறது.
÷இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக பாபு ராஜேந்திரப் பிரசாத் ஜனவரி 26, 1950-ல் பதவி ஏற்றபோது மக்களவைக்கான பொதுத் தேர்தல் நடைபெறாத நிலையில், உடனடியாகக் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. 1952-ல் நடந்த முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகுதான் குடியரசின் துணைத் தலைவர் தேர்தல் நடந்தது. அப்போது யாரைக் குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது என்கிற கேள்வி எழுந்தபோது, அன்றைய பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு ஒரு தெளிவான கருத்தை முன்வைத்தார்.
÷""இந்தியாவின் ஒற்றுமைக்கு மிக முக்கியமான பங்கு வகிப்பது தென்னிந்தியாதான். தென்னிந்திய மக்கள் "தில்லி மிகத் தொலைவில் இருக்கிறது' (தில்லி பஹுத் தூர் ஹை) என்று துளியும் நினைத்துவிடக் கூடாது. இந்தியாவின் குடியரசுத் தலைவர் வட நாட்டைச் சேர்ந்தவராக இருந்தால், குடியரசுத் துணைத் தலைவர் தென்னாட்டைச் சேர்ந்தவராகவும், குடியரசுத் தலைவர் தென்னாட்டைச் சேர்ந்தவராக இருந்தால் துணைத் தலைவர் வடநாட்டைச் சேர்நதவராகவும் இருக்க வேண்டும். அதேபோல, குடியரசுத் தலைவர் பதவி வடநாட்டவருக்கும் தென்னாட்டவருக்குமாக மாறிமாறி கிடைக்கும்படியான மரபும் கடைபிடிக்கப்பட வேண்டும்'' என்று தெளிவாகவும் தீர்க்கதரிசனத்துடனும் தனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்தியதுடன் நிற்கவில்லை.
÷குடியரசுத் தலைவர் பதவிக்கு அரசியல் சார்ந்தவர்கள் மட்டும்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிற கருத்தையும் பண்டித ஜவஹர்லால் நேரு ஏற்றுக் கொள்ளவில்லை. அறிஞர்கள் இந்தியாவின் முதல் குடிமகனாக வருவதுதான் சிறப்பாக இருக்கும் என்று கருதினார். "தத்துவ மேதை' டாக்டர் ராதாகிருஷ்ணனின் இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்வு பண்டித ஜவஹர்லால் நேருவின் தனிப்பட்ட தேர்வாக இருந்தது.
÷குடியரசுத் துணைத் தலைவராக இருப்பவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் மரபு முதன்முதலில் பிரதமர் இந்திரா காந்தியால் 1974-ல் மீறப்பட்டது. குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜி.எஸ். பதக்குக்கு பதிலாக பக்ருதீன் அலி அகமது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக 1977, 1982, 2002, 2007 தேர்தல்களிலும் இந்த மரபு மீறப்பட்டது.
ராஜேந்திரப் பிரசாத், ராதாகிருஷ்ணன், ஜாகீர் ஹுசைன், வி.வி. கிரி, பக்ருதீன் அலி அகமது, சஞ்சீவ ரெட்டி, ஜெயில் சிங், ஆர். வெங்கட்ராமன், சங்கர் தயாள் சர்மா, கே.ஆர். நாராயணன் என்று வடக்கும் தெற்கும் மாறி மாறிக் குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரித்த மரபு முதல் முறையாக மீறப்பட்டது ஏ.பி.ஜே. அப்துல் கலாம் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதுதான். அப்போதும்கூடத் துணைத் தலைவராக வடநாட்டைச் சேர்ந்த கிருஷ்ணகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
÷2007 குடியரசுத் தலைவர் தேர்தலின்போது மிகப்பெரிய மரபு மீறல் நிகழ்ந்தது. இத்தனைக்கும் அன்றைய குடியரசுத் தலைவர் தேர்தலில் முக்கிய பங்கு வகித்த கட்சி "வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது' என்று முழக்கமிட்டுத் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த திராவிட முன்னேற்றக் கழகம் என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை.
÷தென்னிந்தியரான (தமிழரான) ஏ.பி.ஜே. அப்துல் கலாமைத் தொடர்ந்து அடுத்த குடியரசுத் தலைவராக வடநாட்டைச் சேர்ந்த பிரதிபா பாட்டீல் வருவதைத் திமுக ஆதரித்ததில் தவறில்லை. மரபுப்படி வடநாட்டவர் குடியரசுத் தலைவராக வேண்டியதுதான் முறையும் கூட. ஆனால், குடியரசுத் துணைத் தலைவராகத் தென்னிந்தியர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று மரபு வழி நின்று திமுக குரல் கொடுத்திருக்க வேண்டாமா என்பதுதான் கேள்வி.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்குப் பிரதிபா பாட்டீலைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கத் திமுகவின் ஆதரவு இருந்தாக வேண்டும் என்கிற நிலைமையும் இருந்தது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
÷"தினமணி' தனது தலையங்கத்தின் மூலம் மரபு மீறப்படுவதை சுட்டிக்காட்டியது மட்டுமல்ல, ஏன் திமுகவின் பொதுச் செயலாளரான க. அன்பழகனைக் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்குப் பரிந்துரைக்கக் கூடாது என்று கேள்வியும் எழுப்பி இருந்தது. திமுக தலைவர் கருணாநிதி மட்டும் நினைத்திருந்தால், அவர் உண்மையிலேயே திராவிடப் பற்றாளராக இருந்திருந்தால் கே. அன்பழகனையோ, ஏன், "விடுதலை' கி. வீரமணியையோ கூடக் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்குப் பரிந்துரைத்து, அந்தப் பதவியில் அமர்த்திப் பெருமிதம் அடைந்திருக்க முடியும்.
÷அப்படிச் செய்திருந்தால் அல்லது குறைந்தபட்சம் ஒரு தென்னிந்தியர்தான் மரபுப்படி குடியரசுத் துணைத் தலைவராக வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்திருந்தால், இப்போதைய குடியரசுத் தேர்தலின் போக்கே மாறி இருக்கக் கூடும். அப்படி குடியரசுத் துணைத் தலைவராக இருக்கும் தென்னிந்தியரின் பெயர்தான் மரபுவழி குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்னணி வகிக்கும் பெயராக இருந்திருக்கும்.
÷இப்போது 13வது குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் மரபு மீறப்பட்டு தெற்கு வஞ்சிக்கப்படும் நிலைமை காணப்படுகிறது. மரபு வழி பார்த்தால், இந்த முறை குடியரசுத் தலைவர் பதவி ஒரு தென்னிந்தியருக்குத் தான் தரப்பட வேண்டும். அவர் தமிழரான ஏ.பி.ஜே. அப்துல் கலாமாக இருந்தாலும் சரி, கேரளம், கர்நாடகம், ஆந்திரத்தைச் சேர்ந்த ஒருவராக இருந்தாலும் சரி. ஆனால், குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராகத் தென்னிந்தியர் ஒருவரின் பெயர் கூடப் பேசப்படுவதில்லை.
÷இந்த முறை மீண்டும் வடநாட்டைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், பண்டித ஜவஹர்லால் நேரு தொடங்கி வைத்த மரபு, இந்தியாவின் ஒற்றுமையைக் கட்டிக் காக்க அவர் ஏற்படுத்திய மரபு மீறப்படுவது மட்டுமல்ல, இனி வரும் குடியரசுத் தலைவர் தேர்தல்களில் தென்னிந்தியர் யாருமே தேர்ந்தெடுக்கப்படாமல் போகும் நிலைமைகூட ஏற்பட்டாலும் ஏற்படலாம்; படும்!
÷அப்படி ஒரு நிலைமை ஏற்படக் காரணமாக இருந்தவர் என்கிற பெருமை கருணாநிதியைத்தான் சாரும் - தெற்கை வஞ்சித்து வடக்கு வளர்வதற்கு உதவிய பெருமை!
÷இப்படிப்பட்ட குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரிக்கப் போகும் இந்தியாவின் அடுத்த முதல் குடிமகன் யார் என்கிற சர்ச்சை வலுத்து வருகிறதே தவிர, அதன் பின்னணியில் சில மரபுகள் மீறப்படுவதும் அதன்மூலம் தென்னகம் வஞ்சிக்கப்படுவதும் வசதியாக மறக்கடிக்கப்படுகிறது.
÷இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக பாபு ராஜேந்திரப் பிரசாத் ஜனவரி 26, 1950-ல் பதவி ஏற்றபோது மக்களவைக்கான பொதுத் தேர்தல் நடைபெறாத நிலையில், உடனடியாகக் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. 1952-ல் நடந்த முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகுதான் குடியரசின் துணைத் தலைவர் தேர்தல் நடந்தது. அப்போது யாரைக் குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது என்கிற கேள்வி எழுந்தபோது, அன்றைய பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு ஒரு தெளிவான கருத்தை முன்வைத்தார்.
÷""இந்தியாவின் ஒற்றுமைக்கு மிக முக்கியமான பங்கு வகிப்பது தென்னிந்தியாதான். தென்னிந்திய மக்கள் "தில்லி மிகத் தொலைவில் இருக்கிறது' (தில்லி பஹுத் தூர் ஹை) என்று துளியும் நினைத்துவிடக் கூடாது. இந்தியாவின் குடியரசுத் தலைவர் வட நாட்டைச் சேர்ந்தவராக இருந்தால், குடியரசுத் துணைத் தலைவர் தென்னாட்டைச் சேர்ந்தவராகவும், குடியரசுத் தலைவர் தென்னாட்டைச் சேர்ந்தவராக இருந்தால் துணைத் தலைவர் வடநாட்டைச் சேர்நதவராகவும் இருக்க வேண்டும். அதேபோல, குடியரசுத் தலைவர் பதவி வடநாட்டவருக்கும் தென்னாட்டவருக்குமாக மாறிமாறி கிடைக்கும்படியான மரபும் கடைபிடிக்கப்பட வேண்டும்'' என்று தெளிவாகவும் தீர்க்கதரிசனத்துடனும் தனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்தியதுடன் நிற்கவில்லை.
÷குடியரசுத் தலைவர் பதவிக்கு அரசியல் சார்ந்தவர்கள் மட்டும்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிற கருத்தையும் பண்டித ஜவஹர்லால் நேரு ஏற்றுக் கொள்ளவில்லை. அறிஞர்கள் இந்தியாவின் முதல் குடிமகனாக வருவதுதான் சிறப்பாக இருக்கும் என்று கருதினார். "தத்துவ மேதை' டாக்டர் ராதாகிருஷ்ணனின் இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்வு பண்டித ஜவஹர்லால் நேருவின் தனிப்பட்ட தேர்வாக இருந்தது.
÷குடியரசுத் துணைத் தலைவராக இருப்பவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் மரபு முதன்முதலில் பிரதமர் இந்திரா காந்தியால் 1974-ல் மீறப்பட்டது. குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜி.எஸ். பதக்குக்கு பதிலாக பக்ருதீன் அலி அகமது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக 1977, 1982, 2002, 2007 தேர்தல்களிலும் இந்த மரபு மீறப்பட்டது.
ராஜேந்திரப் பிரசாத், ராதாகிருஷ்ணன், ஜாகீர் ஹுசைன், வி.வி. கிரி, பக்ருதீன் அலி அகமது, சஞ்சீவ ரெட்டி, ஜெயில் சிங், ஆர். வெங்கட்ராமன், சங்கர் தயாள் சர்மா, கே.ஆர். நாராயணன் என்று வடக்கும் தெற்கும் மாறி மாறிக் குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரித்த மரபு முதல் முறையாக மீறப்பட்டது ஏ.பி.ஜே. அப்துல் கலாம் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதுதான். அப்போதும்கூடத் துணைத் தலைவராக வடநாட்டைச் சேர்ந்த கிருஷ்ணகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
÷2007 குடியரசுத் தலைவர் தேர்தலின்போது மிகப்பெரிய மரபு மீறல் நிகழ்ந்தது. இத்தனைக்கும் அன்றைய குடியரசுத் தலைவர் தேர்தலில் முக்கிய பங்கு வகித்த கட்சி "வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது' என்று முழக்கமிட்டுத் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த திராவிட முன்னேற்றக் கழகம் என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை.
÷தென்னிந்தியரான (தமிழரான) ஏ.பி.ஜே. அப்துல் கலாமைத் தொடர்ந்து அடுத்த குடியரசுத் தலைவராக வடநாட்டைச் சேர்ந்த பிரதிபா பாட்டீல் வருவதைத் திமுக ஆதரித்ததில் தவறில்லை. மரபுப்படி வடநாட்டவர் குடியரசுத் தலைவராக வேண்டியதுதான் முறையும் கூட. ஆனால், குடியரசுத் துணைத் தலைவராகத் தென்னிந்தியர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று மரபு வழி நின்று திமுக குரல் கொடுத்திருக்க வேண்டாமா என்பதுதான் கேள்வி.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்குப் பிரதிபா பாட்டீலைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கத் திமுகவின் ஆதரவு இருந்தாக வேண்டும் என்கிற நிலைமையும் இருந்தது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
÷"தினமணி' தனது தலையங்கத்தின் மூலம் மரபு மீறப்படுவதை சுட்டிக்காட்டியது மட்டுமல்ல, ஏன் திமுகவின் பொதுச் செயலாளரான க. அன்பழகனைக் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்குப் பரிந்துரைக்கக் கூடாது என்று கேள்வியும் எழுப்பி இருந்தது. திமுக தலைவர் கருணாநிதி மட்டும் நினைத்திருந்தால், அவர் உண்மையிலேயே திராவிடப் பற்றாளராக இருந்திருந்தால் கே. அன்பழகனையோ, ஏன், "விடுதலை' கி. வீரமணியையோ கூடக் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்குப் பரிந்துரைத்து, அந்தப் பதவியில் அமர்த்திப் பெருமிதம் அடைந்திருக்க முடியும்.
÷அப்படிச் செய்திருந்தால் அல்லது குறைந்தபட்சம் ஒரு தென்னிந்தியர்தான் மரபுப்படி குடியரசுத் துணைத் தலைவராக வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்திருந்தால், இப்போதைய குடியரசுத் தேர்தலின் போக்கே மாறி இருக்கக் கூடும். அப்படி குடியரசுத் துணைத் தலைவராக இருக்கும் தென்னிந்தியரின் பெயர்தான் மரபுவழி குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்னணி வகிக்கும் பெயராக இருந்திருக்கும்.
÷இப்போது 13வது குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் மரபு மீறப்பட்டு தெற்கு வஞ்சிக்கப்படும் நிலைமை காணப்படுகிறது. மரபு வழி பார்த்தால், இந்த முறை குடியரசுத் தலைவர் பதவி ஒரு தென்னிந்தியருக்குத் தான் தரப்பட வேண்டும். அவர் தமிழரான ஏ.பி.ஜே. அப்துல் கலாமாக இருந்தாலும் சரி, கேரளம், கர்நாடகம், ஆந்திரத்தைச் சேர்ந்த ஒருவராக இருந்தாலும் சரி. ஆனால், குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராகத் தென்னிந்தியர் ஒருவரின் பெயர் கூடப் பேசப்படுவதில்லை.
÷இந்த முறை மீண்டும் வடநாட்டைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், பண்டித ஜவஹர்லால் நேரு தொடங்கி வைத்த மரபு, இந்தியாவின் ஒற்றுமையைக் கட்டிக் காக்க அவர் ஏற்படுத்திய மரபு மீறப்படுவது மட்டுமல்ல, இனி வரும் குடியரசுத் தலைவர் தேர்தல்களில் தென்னிந்தியர் யாருமே தேர்ந்தெடுக்கப்படாமல் போகும் நிலைமைகூட ஏற்பட்டாலும் ஏற்படலாம்; படும்!
÷அப்படி ஒரு நிலைமை ஏற்படக் காரணமாக இருந்தவர் என்கிற பெருமை கருணாநிதியைத்தான் சாரும் - தெற்கை வஞ்சித்து வடக்கு வளர்வதற்கு உதவிய பெருமை!
First Published : 10 May 2012 01:34:38 AM IST
Last Updated : 10 May 2012 07:02:50 AM IST
காலம் பொன்னானது
காலம் பொன்னானது
காலத்தின் அருமை கருதி பேச்சை விரைவில் முடிக்கிறேன் என்று நீட்டி முழங்கி மணிக்கணக்கில் அரங்கில் பேசி சோதிப்பவர்கள் இருக்கிறார்கள். காலத்தின் அருமையை நாம் உணர்வதில்லை. காலம் பொன்னானது.
எந்த ஒரு செயலாக்கத்துக்கும் தடங்கல் ஏற்பட்டால் இழப்பை ஈடுகட்ட முடியாது. உதாரணமாக, சென்னை விமானதள விரிவாக்கத்துக்கு 2003-ஆம் ஆண்டு தமிழக அரசால் சுமார் 1,450 ஏக்கர் ஒதுக்கப்பட்டது. ஆனால், சில அமைப்புகளின் எதிர்ப்பால் விரிவாக்கத்தில் தடங்கல் ஏற்பட்டது. விளைவு, சென்னையில் தேக்கநிலை, பெங்களுரூ, ஹைதராபாத் புதிய விமானதளம் அமைப்பதில் முந்திக்கொண்டது,
ஒரு கட்டமைப்புக்குத் தேவை தீர்க்கமான திட்டம், போதுமான நிதி, செயலாற்றுவதற்கான நிபுணர்கள், களப்பணியாளர்கள். இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும். கால அளவு நிர்ணயிப்பதுதான் மிக முக்கியம்.
எவ்வளவோ பயன் தரும் திட்டங்கள், குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்றப்படாததால், நிதி விரயமாகிறது. திட்டத்தின் பயனளிப்பு பெறுவதில் தடங்கல், அதைச்சார்ந்த நிறுவனங்களுக்கு இழப்பு, இதனால் பாதிக்கப்படும் குடும்பங்கள் என்று ஓர் இடத்தில் ஏற்படக்கூடிய தாமதம், நேர விரயம் அடுக்கடுக்காக காற்றலையாகப் பாதிப்பு ஏற்படுத்துகிறது.
ஒரு நாட்டின் வளமையை நிர்ணயிப்பதே அந்நாட்டு மக்கள் எவ்வாறு தமது நேரத்தைச் செலவிடுகிறார்கள் என்பதைப் பொருத்திருக்கிறது. முன்னேறிய நாடுகளில் வேலை செய்யும் பாங்கு, பணிக்கலாசாரம் மெச்சத்தக்கதாக இருக்கும். அநாவசியமாக வம்பளப்பது, தொலைபேசியில் பேசி காலம் கழிப்பது போன்ற சோம்பேறித்தனமான நடவடிக்கையைப் பார்க்க முடியாது.
இந்தியாவில் உள்ள பல பன்னாட்டு நிறுவனங்களிலும் இந்த ஒழுங்குமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. காலத்தின் அருமையை உணர்ந்ததால்தான் வளமான நாடுகளில் செல்வச் செழிப்பு நிலைக்கிறது.
நமது நாட்டில் சுதந்திரம் அடைந்த முதல் 30 ஆண்டுகள் சோஷலிச பொருளாதாரக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டது. பின்தங்கிய பகுதிகளுக்கும், ஏழை மக்களுக்கும் வளர்ச்சியின் பயன் சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கம் இருந்தாலும், நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள். "பெர்மிட் ராஜ்' என்ற வகையில் ஒவ்வொன்றுக்கு அரசு அனுமதி பெற வேண்டும் என்ற நிர்பந்தத்தில் தனி மனித வளர்ச்சியும் ஈடுபாடும் குன்றி தேக்க நிலைதான் தொடர்ந்தது. அப்போது நடைமுறைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் தவறு என்று இப்போது ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், விரயமான காலத்தை ஈடு செய்ய முடியுமா? அந்தத் தேக்க நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் இழப்பைத் திரும்பப் பெற முடியுமா?
வறுமையில் இழந்த வாலிபம்தான் திரும்புமா? அதைத்தான் ஜெயகாந்தன் "தைலியின் கதை' என்ற சிறுகதையில், கிழிந்த ஒத்தப்புடவையைக் குளித்துவிட்டுக் காய்ந்த பிறகு கட்டிக் கொள்ளும் தைலியின் நிலை 1947-இல் எவ்வாறு இருந்ததோ 25 ஆண்டுகளுக்குப் பிறகும் 1972-இல் மாறவில்லை என்று எழுதியிருந்தார். இன்னும் எவ்வளவோ தைலிகள் நாட்டில் இருக்கிறார்கள். கால விரயத்தின் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆப்பிள் கணினியை உருவாக்கி படங்கள், வீடியோக்கள் மற்றும் டிஜிட்டல் கோப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் முறையில் ஐ-பாட் மூலம் புரட்சி ஏற்படுத்தியவர் ஸ்டீவ் ஜாப்ஸ். விதி அவருக்கு எவ்வளவோ துரோகம் செய்தது. விவாகம் முடிக்காத இளம்மாணவிக்கு கூடா உறவு மூலம் பிறந்து, வேறொரு தம்பதியினரால் தத்து எடுக்கப்பட்டு, அவர்களுக்குப் பொருளாதார நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று தனது உயர் கல்வியைப் பாதியில் நிறுத்தி சுயமாகத் தொழில் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் கார் ஷெட்டில் கணினி வடிவமைக்கும் சிறு தொழிலைத் தொடங்கி வாழ்கையில் வெற்றி கண்டார். பல போராட்டங்களுக்கு இடையில் தன்னம்பிக்கை மற்றும் தனது நேரம், முழு உழைப்பையும் மூலதனமாக வைத்து உருவாக்கப்பட்ட நிறுவனம்தான் ஆப்பிள் மேக் கம்ப்யூட்டர். நாலாயிரம் பணியாளர்களைக் கொண்ட இரண்டு பில்லியன் டாலர் கம்பெனியாக இப்போது வளர்ந்துள்ளது.
ஐஃபோன், ஐ-பாட் இவையில்லாமல் வாழ்க்கையில்லை என்று உலகில் உள்ள இளைஞர்களை ஆட்கொண்ட சாதனையாளர் ஸ்டீவ் ஜாப்ஸ். நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர். எங்கு சென்றாலும் இளைஞர்களுக்கு அதன் அருமையை விளக்குவார்.
பல தோல்விகள் அவரைத் துரத்தின. ஆனால், தோல்வியைக் கண்டு துவளாமல் நேரத்தைப் புதிய யுக்திகளில் செலுத்தி வெற்றிப்பாதையை அமைத்துக் கொண்டார். நேரம் ஒன்றுதான் வற்றாத செல்வம். எல்லோருக்கும் சமமாகக் கிடைக்கும் மூலதனம்.
நேரம் எல்லாப் பணிகளுக்கும் முக்கியம் என்றாலும், காவல்துறையைப் பொருத்தமட்டில் நேரம் தவறினால் விபரீத விளைவுகள் ஏற்படும். உயிர், உடைமைகளைப் பாதிக்கும். குற்றங்களைத் தடுப்பதில் கவனம் செலுத்தி வியர்வை சிந்தினால் குற்ற நடப்புகளால் ஏற்படும் ரத்தச் சிதறல்களைத் தவிர்க்கலாம்.
எந்த ஒரு குற்ற நிகழ்வை எடுத்துக் கொண்டாலும், உரிய சமயத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் குற்ற நிகழ்வைத் தவிர்த்திருக்கலாமே என்று அந்த சரக அதிகாரிக்கு உள்ளூர நெஞ்சு குறுகுறுக்கும் என்பதில் ஐயமில்லை.
குற்றத்தடுப்பு செயலாக்கத்தில் அதிக கவனம் செலுத்துவதில்லை. நிகழ்ந்த குற்றங்களைக் கண்டுபிடித்துவிட்டால் காவல் துறை அதிகாரிகள் மெச்சப்படுகின்றனர். ஆனால், தனது உழைப்பால் குறித்த நேரத்தைத் தவறவிடாது பணி செய்து குற்ற நிகழ்வைத் தவிர்த்தவர் பாராட்டப்படுவதில்லை.
மாவோயிஸ்ட் பிரச்னை இவ்வளவு தலைவிரித்தாடுகிறது. மாவட்ட ஆட்சியர்கள் கடத்தப்படுகிறார்கள். இன்னும் அந்தப் பிரச்னைகளுக்கு முனைப்பான தீர்வு எடுக்கப்படவில்லை. மாநில அரசும், மத்திய அரசும் பல்முனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக பட்டியலிட்டாலும் பிரச்னை வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
ஒடிசா மாநிலத்தில் மால்காங்கிரி மாவட்ட ஆட்சியர் வினீல் கிருஷ்ணா கடத்தப்பட்டார். பின்பு இரண்டு இத்தாலி நாட்டுச் சுற்றுலாப் பயணிகள், சட்டசபை அங்கத்தினர், இப்போது சுக்மா ஆட்சியர் அலக்ஸ்பால் மேனன். மேனன் கடத்தலில் கொடுமை என்னவென்றால் அவரது இரண்டு பாதுகாவலர்களும் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டனர். மேனன் கடத்தல் நாட்டை உலுக்கியதே தவிர, இரண்டு காவலர்களின் உயிரிழப்புக்கு இரண்டு சொட்டுக் கண்ணீர்கூட எவரும் விடவில்லை. காவலர்களின் உயிர் அவ்வளவு துச்சமாகிவிட்டது.
மாவோயிஸ்டுகள் ஆதிக்கத்தில் உள்ள இடங்களுக்கு அரசு அதிகாரிகள் செல்லும்பொழுது பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்ற வேண்டும். ஏதோ ஓர் ஆர்வத்தில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாதுகாப்பு முறைகளை மறந்து களம் இறங்கிவிடுவதால் இத்தகைய விபரீதங்கள் நிகழ்கின்றன.
இரண்டு உயிர்களை இழந்த குடும்பங்களின் நிலை என்ன? வானம் பொழிந்தாலும் பூமி விளைந்தாலும் அந்தக் குடும்பங்களின் வாழ்வு கண்ணீரில்தான் தளும்பும். சட்டம் ஒழுங்குப் பிரச்னைகள் உரிய சமயத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறுவதால்தான் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்துகிறது. கரணம் தப்பினால் மரண அபாயம் தலைதூக்கும் என்பது காவல்துறைப் பணியில் அன்றாடம் உணரலாம்.
வாழ்வின் சாரம் மின்சாரம் என்ற அளவுக்கு மின்சாரத்தினால் இயங்கும் பல உபகரணங்களுக்கு நாம் அடிமையாகி விட்டோம். மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் உரிய நேரத்தில் திட்டமிட்டு உற்பத்தியைப் பெருக்காதது ஒரு முக்கியக் காரணம்.
அந்த உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காததால் விளைவுகளை இப்போது சந்திக்க நேரிடுகிறது. இப்போது எடுக்கப்படும் முயற்சிகளால் அதுவும் பசுமை சக்தி எனப்படும் சூரிய சக்தியை அறுவடை செய்யும் பல்முனை முயற்சி மின்சாரம் பற்றாக்குறை என்ற நிலை மாற வழி வகுக்கும். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் ஆண்டுக்கு 310 நாள்கள் சூரிய சக்தி பயனளிப்புக்குக் கொண்டு வரமுடியும் என்று நிபுணர்கள் ஆய்வில் தெரிய வருகிறது. அரசும் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சம்பந்தப்பட்ட பொறியாளர்களும், அதிகாரிகளும், காலந்தாழ்த்தாது போர்க்கால அடிப்படையில் சக்தி ஈட்டும் கதிர் தளங்களை அமைக்க வேண்டும்.
குஜராத்தில் 16 மாதங்களில் இத்தகைய சூரியசக்தி ஈட்டக்கூடிய சோலார் கருவிகள் அமைக்கப்பட்டு பயனளிப்புக்கு வந்துள்ளது. இது நிச்சயமாக நம்மாலும் முடியும். "காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும் ஞாலத்தின் மாணப் பெரிது' என்றார் வள்ளுவர். அரசின் நலத்திட்டங்கள் உரிய சமயத்தில் ஏழை மக்களுக்கு அளித்தால் பெரிதும் உதவும்.
நமது முதலமைச்சர் அறிவித்த பல நலத்திட்டங்கள் துரிதமாக நடைமுறைப்படுத்தப்பட்டது நிறைவைத் தருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக் கணினி, இருபது கிலோ இலவச அரிசி, மாணவர்களுக்கு காலணி, சீருடை, புத்தகங்கள், ஏழை மக்களின் வாழ்வாதாரத்துக்கு ஆடு வளர்க்கும் திட்டம் போன்ற பல திட்டங்களில் ஏழை மக்களுக்குத் தக்க சமயத்தில் உதவி அளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 1.51 லட்சம் மடிக் கணினிகளும், 1.85 கோடி குடும்பங்களுக்கு இலவச அரிசியும், 14.38 லட்சம் மக்களுக்கு இலவச மின்விசிறி, மின் அரைவை இயந்திரம், 81.20 லட்சம் குழந்தைகளுக்கு காலணிகள், புத்தகங்கள் கடந்த ஒரு வருடத்தில் உரியவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது மகத்தான சாதனை. இது காலத்தினால் செய்த உதவி.
ஏழைக் குடும்பங்கள் இதைச் சரியாகப் பயன்படுத்தி ஏதோ இலவசமாகக் கிடைத்தது என்று சோம்பி இருக்காமல் மேலும் உத்வேகத்துடன் உழைத்தால்தான் குடும்பம் முன்னேறும், சமுதாயம் வளம் பெரும்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள "தொலைநோக்குப் பார்வை 2023' இசைத்தமிழ்போல் தமிழ்நாட்டுக்குத் தொழில் சாதனையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு 1.50 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் முக்கியமாக கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் அடுத்து வரும் ஆண்டுகளில் நிறைவேற்றப்படும். "விஷன் 2023' பொருளாதார, நிர்வாக நிபுணர்களின் பெருமளவு பாராட்டைப் பெற்றுள்ளது.
இவ்வாறு இலக்குகள் நிர்ணயிப்பது அவசியம். இத்திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவதற்கு நிதி மட்டுமன்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் முனைப்பான செயலாக்கம் அவசியம். சுய ஆர்வத்தோடு செயல்படுபவர்களைத் தெரிவு செய்து அவர்கள் நிபுணத்துவம் பெற்ற துறைகளுக்கு நியமித்தால் திட்டங்கள் காலதாமதமின்றி நிறைவேறும்.
வாழ்க்கையை நேசிப்பவர்கள் நேரத்தை விரயமாக்கக் கூடாது. வாழ்க்கையில் சாதனைபடைத்தவர்கள் எல்லோரும் நேரத்தைத் திறமையாகப் பயன்படுத்துவதைப் பழக்கமாகக் கொண்டவர்கள்.
என்னமாய் நேரம் பறக்கிறது என்று அங்கலாய்க்கிறோம். கடந்த நேரம் திரும்பி வராது. ஆனால், தற்கால நேரம் நமது கையில். நேரம் பறந்தாலும் விமான ஓட்டி நாம்தான் என்பது எவ்வளவு உண்மை. நேரத்தை வெறுமையில் ஓட்டாமல் சமுதாயத்துக்கு ஒட்டும்படி பயனளிக்கும் வகையில் செலவிடுவதே விவேகம்.
எந்த ஒரு செயலாக்கத்துக்கும் தடங்கல் ஏற்பட்டால் இழப்பை ஈடுகட்ட முடியாது. உதாரணமாக, சென்னை விமானதள விரிவாக்கத்துக்கு 2003-ஆம் ஆண்டு தமிழக அரசால் சுமார் 1,450 ஏக்கர் ஒதுக்கப்பட்டது. ஆனால், சில அமைப்புகளின் எதிர்ப்பால் விரிவாக்கத்தில் தடங்கல் ஏற்பட்டது. விளைவு, சென்னையில் தேக்கநிலை, பெங்களுரூ, ஹைதராபாத் புதிய விமானதளம் அமைப்பதில் முந்திக்கொண்டது,
ஒரு கட்டமைப்புக்குத் தேவை தீர்க்கமான திட்டம், போதுமான நிதி, செயலாற்றுவதற்கான நிபுணர்கள், களப்பணியாளர்கள். இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும். கால அளவு நிர்ணயிப்பதுதான் மிக முக்கியம்.
எவ்வளவோ பயன் தரும் திட்டங்கள், குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்றப்படாததால், நிதி விரயமாகிறது. திட்டத்தின் பயனளிப்பு பெறுவதில் தடங்கல், அதைச்சார்ந்த நிறுவனங்களுக்கு இழப்பு, இதனால் பாதிக்கப்படும் குடும்பங்கள் என்று ஓர் இடத்தில் ஏற்படக்கூடிய தாமதம், நேர விரயம் அடுக்கடுக்காக காற்றலையாகப் பாதிப்பு ஏற்படுத்துகிறது.
ஒரு நாட்டின் வளமையை நிர்ணயிப்பதே அந்நாட்டு மக்கள் எவ்வாறு தமது நேரத்தைச் செலவிடுகிறார்கள் என்பதைப் பொருத்திருக்கிறது. முன்னேறிய நாடுகளில் வேலை செய்யும் பாங்கு, பணிக்கலாசாரம் மெச்சத்தக்கதாக இருக்கும். அநாவசியமாக வம்பளப்பது, தொலைபேசியில் பேசி காலம் கழிப்பது போன்ற சோம்பேறித்தனமான நடவடிக்கையைப் பார்க்க முடியாது.
இந்தியாவில் உள்ள பல பன்னாட்டு நிறுவனங்களிலும் இந்த ஒழுங்குமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. காலத்தின் அருமையை உணர்ந்ததால்தான் வளமான நாடுகளில் செல்வச் செழிப்பு நிலைக்கிறது.
நமது நாட்டில் சுதந்திரம் அடைந்த முதல் 30 ஆண்டுகள் சோஷலிச பொருளாதாரக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டது. பின்தங்கிய பகுதிகளுக்கும், ஏழை மக்களுக்கும் வளர்ச்சியின் பயன் சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கம் இருந்தாலும், நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள். "பெர்மிட் ராஜ்' என்ற வகையில் ஒவ்வொன்றுக்கு அரசு அனுமதி பெற வேண்டும் என்ற நிர்பந்தத்தில் தனி மனித வளர்ச்சியும் ஈடுபாடும் குன்றி தேக்க நிலைதான் தொடர்ந்தது. அப்போது நடைமுறைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் தவறு என்று இப்போது ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், விரயமான காலத்தை ஈடு செய்ய முடியுமா? அந்தத் தேக்க நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் இழப்பைத் திரும்பப் பெற முடியுமா?
வறுமையில் இழந்த வாலிபம்தான் திரும்புமா? அதைத்தான் ஜெயகாந்தன் "தைலியின் கதை' என்ற சிறுகதையில், கிழிந்த ஒத்தப்புடவையைக் குளித்துவிட்டுக் காய்ந்த பிறகு கட்டிக் கொள்ளும் தைலியின் நிலை 1947-இல் எவ்வாறு இருந்ததோ 25 ஆண்டுகளுக்குப் பிறகும் 1972-இல் மாறவில்லை என்று எழுதியிருந்தார். இன்னும் எவ்வளவோ தைலிகள் நாட்டில் இருக்கிறார்கள். கால விரயத்தின் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆப்பிள் கணினியை உருவாக்கி படங்கள், வீடியோக்கள் மற்றும் டிஜிட்டல் கோப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் முறையில் ஐ-பாட் மூலம் புரட்சி ஏற்படுத்தியவர் ஸ்டீவ் ஜாப்ஸ். விதி அவருக்கு எவ்வளவோ துரோகம் செய்தது. விவாகம் முடிக்காத இளம்மாணவிக்கு கூடா உறவு மூலம் பிறந்து, வேறொரு தம்பதியினரால் தத்து எடுக்கப்பட்டு, அவர்களுக்குப் பொருளாதார நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று தனது உயர் கல்வியைப் பாதியில் நிறுத்தி சுயமாகத் தொழில் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் கார் ஷெட்டில் கணினி வடிவமைக்கும் சிறு தொழிலைத் தொடங்கி வாழ்கையில் வெற்றி கண்டார். பல போராட்டங்களுக்கு இடையில் தன்னம்பிக்கை மற்றும் தனது நேரம், முழு உழைப்பையும் மூலதனமாக வைத்து உருவாக்கப்பட்ட நிறுவனம்தான் ஆப்பிள் மேக் கம்ப்யூட்டர். நாலாயிரம் பணியாளர்களைக் கொண்ட இரண்டு பில்லியன் டாலர் கம்பெனியாக இப்போது வளர்ந்துள்ளது.
ஐஃபோன், ஐ-பாட் இவையில்லாமல் வாழ்க்கையில்லை என்று உலகில் உள்ள இளைஞர்களை ஆட்கொண்ட சாதனையாளர் ஸ்டீவ் ஜாப்ஸ். நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர். எங்கு சென்றாலும் இளைஞர்களுக்கு அதன் அருமையை விளக்குவார்.
பல தோல்விகள் அவரைத் துரத்தின. ஆனால், தோல்வியைக் கண்டு துவளாமல் நேரத்தைப் புதிய யுக்திகளில் செலுத்தி வெற்றிப்பாதையை அமைத்துக் கொண்டார். நேரம் ஒன்றுதான் வற்றாத செல்வம். எல்லோருக்கும் சமமாகக் கிடைக்கும் மூலதனம்.
நேரம் எல்லாப் பணிகளுக்கும் முக்கியம் என்றாலும், காவல்துறையைப் பொருத்தமட்டில் நேரம் தவறினால் விபரீத விளைவுகள் ஏற்படும். உயிர், உடைமைகளைப் பாதிக்கும். குற்றங்களைத் தடுப்பதில் கவனம் செலுத்தி வியர்வை சிந்தினால் குற்ற நடப்புகளால் ஏற்படும் ரத்தச் சிதறல்களைத் தவிர்க்கலாம்.
எந்த ஒரு குற்ற நிகழ்வை எடுத்துக் கொண்டாலும், உரிய சமயத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் குற்ற நிகழ்வைத் தவிர்த்திருக்கலாமே என்று அந்த சரக அதிகாரிக்கு உள்ளூர நெஞ்சு குறுகுறுக்கும் என்பதில் ஐயமில்லை.
குற்றத்தடுப்பு செயலாக்கத்தில் அதிக கவனம் செலுத்துவதில்லை. நிகழ்ந்த குற்றங்களைக் கண்டுபிடித்துவிட்டால் காவல் துறை அதிகாரிகள் மெச்சப்படுகின்றனர். ஆனால், தனது உழைப்பால் குறித்த நேரத்தைத் தவறவிடாது பணி செய்து குற்ற நிகழ்வைத் தவிர்த்தவர் பாராட்டப்படுவதில்லை.
மாவோயிஸ்ட் பிரச்னை இவ்வளவு தலைவிரித்தாடுகிறது. மாவட்ட ஆட்சியர்கள் கடத்தப்படுகிறார்கள். இன்னும் அந்தப் பிரச்னைகளுக்கு முனைப்பான தீர்வு எடுக்கப்படவில்லை. மாநில அரசும், மத்திய அரசும் பல்முனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக பட்டியலிட்டாலும் பிரச்னை வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
ஒடிசா மாநிலத்தில் மால்காங்கிரி மாவட்ட ஆட்சியர் வினீல் கிருஷ்ணா கடத்தப்பட்டார். பின்பு இரண்டு இத்தாலி நாட்டுச் சுற்றுலாப் பயணிகள், சட்டசபை அங்கத்தினர், இப்போது சுக்மா ஆட்சியர் அலக்ஸ்பால் மேனன். மேனன் கடத்தலில் கொடுமை என்னவென்றால் அவரது இரண்டு பாதுகாவலர்களும் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டனர். மேனன் கடத்தல் நாட்டை உலுக்கியதே தவிர, இரண்டு காவலர்களின் உயிரிழப்புக்கு இரண்டு சொட்டுக் கண்ணீர்கூட எவரும் விடவில்லை. காவலர்களின் உயிர் அவ்வளவு துச்சமாகிவிட்டது.
மாவோயிஸ்டுகள் ஆதிக்கத்தில் உள்ள இடங்களுக்கு அரசு அதிகாரிகள் செல்லும்பொழுது பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்ற வேண்டும். ஏதோ ஓர் ஆர்வத்தில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாதுகாப்பு முறைகளை மறந்து களம் இறங்கிவிடுவதால் இத்தகைய விபரீதங்கள் நிகழ்கின்றன.
இரண்டு உயிர்களை இழந்த குடும்பங்களின் நிலை என்ன? வானம் பொழிந்தாலும் பூமி விளைந்தாலும் அந்தக் குடும்பங்களின் வாழ்வு கண்ணீரில்தான் தளும்பும். சட்டம் ஒழுங்குப் பிரச்னைகள் உரிய சமயத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறுவதால்தான் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்துகிறது. கரணம் தப்பினால் மரண அபாயம் தலைதூக்கும் என்பது காவல்துறைப் பணியில் அன்றாடம் உணரலாம்.
வாழ்வின் சாரம் மின்சாரம் என்ற அளவுக்கு மின்சாரத்தினால் இயங்கும் பல உபகரணங்களுக்கு நாம் அடிமையாகி விட்டோம். மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் உரிய நேரத்தில் திட்டமிட்டு உற்பத்தியைப் பெருக்காதது ஒரு முக்கியக் காரணம்.
அந்த உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காததால் விளைவுகளை இப்போது சந்திக்க நேரிடுகிறது. இப்போது எடுக்கப்படும் முயற்சிகளால் அதுவும் பசுமை சக்தி எனப்படும் சூரிய சக்தியை அறுவடை செய்யும் பல்முனை முயற்சி மின்சாரம் பற்றாக்குறை என்ற நிலை மாற வழி வகுக்கும். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் ஆண்டுக்கு 310 நாள்கள் சூரிய சக்தி பயனளிப்புக்குக் கொண்டு வரமுடியும் என்று நிபுணர்கள் ஆய்வில் தெரிய வருகிறது. அரசும் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சம்பந்தப்பட்ட பொறியாளர்களும், அதிகாரிகளும், காலந்தாழ்த்தாது போர்க்கால அடிப்படையில் சக்தி ஈட்டும் கதிர் தளங்களை அமைக்க வேண்டும்.
குஜராத்தில் 16 மாதங்களில் இத்தகைய சூரியசக்தி ஈட்டக்கூடிய சோலார் கருவிகள் அமைக்கப்பட்டு பயனளிப்புக்கு வந்துள்ளது. இது நிச்சயமாக நம்மாலும் முடியும். "காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும் ஞாலத்தின் மாணப் பெரிது' என்றார் வள்ளுவர். அரசின் நலத்திட்டங்கள் உரிய சமயத்தில் ஏழை மக்களுக்கு அளித்தால் பெரிதும் உதவும்.
நமது முதலமைச்சர் அறிவித்த பல நலத்திட்டங்கள் துரிதமாக நடைமுறைப்படுத்தப்பட்டது நிறைவைத் தருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக் கணினி, இருபது கிலோ இலவச அரிசி, மாணவர்களுக்கு காலணி, சீருடை, புத்தகங்கள், ஏழை மக்களின் வாழ்வாதாரத்துக்கு ஆடு வளர்க்கும் திட்டம் போன்ற பல திட்டங்களில் ஏழை மக்களுக்குத் தக்க சமயத்தில் உதவி அளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 1.51 லட்சம் மடிக் கணினிகளும், 1.85 கோடி குடும்பங்களுக்கு இலவச அரிசியும், 14.38 லட்சம் மக்களுக்கு இலவச மின்விசிறி, மின் அரைவை இயந்திரம், 81.20 லட்சம் குழந்தைகளுக்கு காலணிகள், புத்தகங்கள் கடந்த ஒரு வருடத்தில் உரியவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது மகத்தான சாதனை. இது காலத்தினால் செய்த உதவி.
ஏழைக் குடும்பங்கள் இதைச் சரியாகப் பயன்படுத்தி ஏதோ இலவசமாகக் கிடைத்தது என்று சோம்பி இருக்காமல் மேலும் உத்வேகத்துடன் உழைத்தால்தான் குடும்பம் முன்னேறும், சமுதாயம் வளம் பெரும்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள "தொலைநோக்குப் பார்வை 2023' இசைத்தமிழ்போல் தமிழ்நாட்டுக்குத் தொழில் சாதனையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு 1.50 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் முக்கியமாக கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் அடுத்து வரும் ஆண்டுகளில் நிறைவேற்றப்படும். "விஷன் 2023' பொருளாதார, நிர்வாக நிபுணர்களின் பெருமளவு பாராட்டைப் பெற்றுள்ளது.
இவ்வாறு இலக்குகள் நிர்ணயிப்பது அவசியம். இத்திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவதற்கு நிதி மட்டுமன்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் முனைப்பான செயலாக்கம் அவசியம். சுய ஆர்வத்தோடு செயல்படுபவர்களைத் தெரிவு செய்து அவர்கள் நிபுணத்துவம் பெற்ற துறைகளுக்கு நியமித்தால் திட்டங்கள் காலதாமதமின்றி நிறைவேறும்.
வாழ்க்கையை நேசிப்பவர்கள் நேரத்தை விரயமாக்கக் கூடாது. வாழ்க்கையில் சாதனைபடைத்தவர்கள் எல்லோரும் நேரத்தைத் திறமையாகப் பயன்படுத்துவதைப் பழக்கமாகக் கொண்டவர்கள்.
என்னமாய் நேரம் பறக்கிறது என்று அங்கலாய்க்கிறோம். கடந்த நேரம் திரும்பி வராது. ஆனால், தற்கால நேரம் நமது கையில். நேரம் பறந்தாலும் விமான ஓட்டி நாம்தான் என்பது எவ்வளவு உண்மை. நேரத்தை வெறுமையில் ஓட்டாமல் சமுதாயத்துக்கு ஒட்டும்படி பயனளிக்கும் வகையில் செலவிடுவதே விவேகம்.
First Published : 16 May 2012 12:51:21 AM IST
Subscribe to:
Posts (Atom)