Sunday, 20 May 2012
Wednesday, 16 May 2012
மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம்
மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம்

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான நாள் நெருங்க நெருங்க, ரய்சினா குன்றத்தின் மீது அமைந்திருக்கும் அந்த நாள் வைஸ்ராய் மாளிகையான இந்நாள் குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரிக்கப் போவது யார் என்கிற எதிர்பார்ப்பு நாளும் கிழமையும் அதிகரித்து வருகிறது. 13வது குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்கப் போகிறவர் என்கிற பெருமைக்குரியவர் இன்னார்தான் என்று இன்னும் அறுதியிட்டுக் கூற முடியாத நிலைமைக்குக் காரணம், எந்த ஒரு கட்சியும், கூட்டணியும் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு வாக்குகள் பெற்றிருக்கவில்லை என்பதுதான்.
÷இப்படிப்பட்ட குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரிக்கப் போகும் இந்தியாவின் அடுத்த முதல் குடிமகன் யார் என்கிற சர்ச்சை வலுத்து வருகிறதே தவிர, அதன் பின்னணியில் சில மரபுகள் மீறப்படுவதும் அதன்மூலம் தென்னகம் வஞ்சிக்கப்படுவதும் வசதியாக மறக்கடிக்கப்படுகிறது.
÷இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக பாபு ராஜேந்திரப் பிரசாத் ஜனவரி 26, 1950-ல் பதவி ஏற்றபோது மக்களவைக்கான பொதுத் தேர்தல் நடைபெறாத நிலையில், உடனடியாகக் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. 1952-ல் நடந்த முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகுதான் குடியரசின் துணைத் தலைவர் தேர்தல் நடந்தது. அப்போது யாரைக் குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது என்கிற கேள்வி எழுந்தபோது, அன்றைய பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு ஒரு தெளிவான கருத்தை முன்வைத்தார்.
÷""இந்தியாவின் ஒற்றுமைக்கு மிக முக்கியமான பங்கு வகிப்பது தென்னிந்தியாதான். தென்னிந்திய மக்கள் "தில்லி மிகத் தொலைவில் இருக்கிறது' (தில்லி பஹுத் தூர் ஹை) என்று துளியும் நினைத்துவிடக் கூடாது. இந்தியாவின் குடியரசுத் தலைவர் வட நாட்டைச் சேர்ந்தவராக இருந்தால், குடியரசுத் துணைத் தலைவர் தென்னாட்டைச் சேர்ந்தவராகவும், குடியரசுத் தலைவர் தென்னாட்டைச் சேர்ந்தவராக இருந்தால் துணைத் தலைவர் வடநாட்டைச் சேர்நதவராகவும் இருக்க வேண்டும். அதேபோல, குடியரசுத் தலைவர் பதவி வடநாட்டவருக்கும் தென்னாட்டவருக்குமாக மாறிமாறி கிடைக்கும்படியான மரபும் கடைபிடிக்கப்பட வேண்டும்'' என்று தெளிவாகவும் தீர்க்கதரிசனத்துடனும் தனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்தியதுடன் நிற்கவில்லை.
÷குடியரசுத் தலைவர் பதவிக்கு அரசியல் சார்ந்தவர்கள் மட்டும்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிற கருத்தையும் பண்டித ஜவஹர்லால் நேரு ஏற்றுக் கொள்ளவில்லை. அறிஞர்கள் இந்தியாவின் முதல் குடிமகனாக வருவதுதான் சிறப்பாக இருக்கும் என்று கருதினார். "தத்துவ மேதை' டாக்டர் ராதாகிருஷ்ணனின் இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்வு பண்டித ஜவஹர்லால் நேருவின் தனிப்பட்ட தேர்வாக இருந்தது.
÷குடியரசுத் துணைத் தலைவராக இருப்பவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் மரபு முதன்முதலில் பிரதமர் இந்திரா காந்தியால் 1974-ல் மீறப்பட்டது. குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜி.எஸ். பதக்குக்கு பதிலாக பக்ருதீன் அலி அகமது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக 1977, 1982, 2002, 2007 தேர்தல்களிலும் இந்த மரபு மீறப்பட்டது.
ராஜேந்திரப் பிரசாத், ராதாகிருஷ்ணன், ஜாகீர் ஹுசைன், வி.வி. கிரி, பக்ருதீன் அலி அகமது, சஞ்சீவ ரெட்டி, ஜெயில் சிங், ஆர். வெங்கட்ராமன், சங்கர் தயாள் சர்மா, கே.ஆர். நாராயணன் என்று வடக்கும் தெற்கும் மாறி மாறிக் குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரித்த மரபு முதல் முறையாக மீறப்பட்டது ஏ.பி.ஜே. அப்துல் கலாம் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதுதான். அப்போதும்கூடத் துணைத் தலைவராக வடநாட்டைச் சேர்ந்த கிருஷ்ணகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
÷2007 குடியரசுத் தலைவர் தேர்தலின்போது மிகப்பெரிய மரபு மீறல் நிகழ்ந்தது. இத்தனைக்கும் அன்றைய குடியரசுத் தலைவர் தேர்தலில் முக்கிய பங்கு வகித்த கட்சி "வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது' என்று முழக்கமிட்டுத் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த திராவிட முன்னேற்றக் கழகம் என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை.
÷தென்னிந்தியரான (தமிழரான) ஏ.பி.ஜே. அப்துல் கலாமைத் தொடர்ந்து அடுத்த குடியரசுத் தலைவராக வடநாட்டைச் சேர்ந்த பிரதிபா பாட்டீல் வருவதைத் திமுக ஆதரித்ததில் தவறில்லை. மரபுப்படி வடநாட்டவர் குடியரசுத் தலைவராக வேண்டியதுதான் முறையும் கூட. ஆனால், குடியரசுத் துணைத் தலைவராகத் தென்னிந்தியர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று மரபு வழி நின்று திமுக குரல் கொடுத்திருக்க வேண்டாமா என்பதுதான் கேள்வி.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்குப் பிரதிபா பாட்டீலைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கத் திமுகவின் ஆதரவு இருந்தாக வேண்டும் என்கிற நிலைமையும் இருந்தது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
÷"தினமணி' தனது தலையங்கத்தின் மூலம் மரபு மீறப்படுவதை சுட்டிக்காட்டியது மட்டுமல்ல, ஏன் திமுகவின் பொதுச் செயலாளரான க. அன்பழகனைக் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்குப் பரிந்துரைக்கக் கூடாது என்று கேள்வியும் எழுப்பி இருந்தது. திமுக தலைவர் கருணாநிதி மட்டும் நினைத்திருந்தால், அவர் உண்மையிலேயே திராவிடப் பற்றாளராக இருந்திருந்தால் கே. அன்பழகனையோ, ஏன், "விடுதலை' கி. வீரமணியையோ கூடக் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்குப் பரிந்துரைத்து, அந்தப் பதவியில் அமர்த்திப் பெருமிதம் அடைந்திருக்க முடியும்.
÷அப்படிச் செய்திருந்தால் அல்லது குறைந்தபட்சம் ஒரு தென்னிந்தியர்தான் மரபுப்படி குடியரசுத் துணைத் தலைவராக வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்திருந்தால், இப்போதைய குடியரசுத் தேர்தலின் போக்கே மாறி இருக்கக் கூடும். அப்படி குடியரசுத் துணைத் தலைவராக இருக்கும் தென்னிந்தியரின் பெயர்தான் மரபுவழி குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்னணி வகிக்கும் பெயராக இருந்திருக்கும்.
÷இப்போது 13வது குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் மரபு மீறப்பட்டு தெற்கு வஞ்சிக்கப்படும் நிலைமை காணப்படுகிறது. மரபு வழி பார்த்தால், இந்த முறை குடியரசுத் தலைவர் பதவி ஒரு தென்னிந்தியருக்குத் தான் தரப்பட வேண்டும். அவர் தமிழரான ஏ.பி.ஜே. அப்துல் கலாமாக இருந்தாலும் சரி, கேரளம், கர்நாடகம், ஆந்திரத்தைச் சேர்ந்த ஒருவராக இருந்தாலும் சரி. ஆனால், குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராகத் தென்னிந்தியர் ஒருவரின் பெயர் கூடப் பேசப்படுவதில்லை.
÷இந்த முறை மீண்டும் வடநாட்டைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், பண்டித ஜவஹர்லால் நேரு தொடங்கி வைத்த மரபு, இந்தியாவின் ஒற்றுமையைக் கட்டிக் காக்க அவர் ஏற்படுத்திய மரபு மீறப்படுவது மட்டுமல்ல, இனி வரும் குடியரசுத் தலைவர் தேர்தல்களில் தென்னிந்தியர் யாருமே தேர்ந்தெடுக்கப்படாமல் போகும் நிலைமைகூட ஏற்பட்டாலும் ஏற்படலாம்; படும்!
÷அப்படி ஒரு நிலைமை ஏற்படக் காரணமாக இருந்தவர் என்கிற பெருமை கருணாநிதியைத்தான் சாரும் - தெற்கை வஞ்சித்து வடக்கு வளர்வதற்கு உதவிய பெருமை!
÷இப்படிப்பட்ட குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரிக்கப் போகும் இந்தியாவின் அடுத்த முதல் குடிமகன் யார் என்கிற சர்ச்சை வலுத்து வருகிறதே தவிர, அதன் பின்னணியில் சில மரபுகள் மீறப்படுவதும் அதன்மூலம் தென்னகம் வஞ்சிக்கப்படுவதும் வசதியாக மறக்கடிக்கப்படுகிறது.
÷இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக பாபு ராஜேந்திரப் பிரசாத் ஜனவரி 26, 1950-ல் பதவி ஏற்றபோது மக்களவைக்கான பொதுத் தேர்தல் நடைபெறாத நிலையில், உடனடியாகக் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. 1952-ல் நடந்த முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகுதான் குடியரசின் துணைத் தலைவர் தேர்தல் நடந்தது. அப்போது யாரைக் குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது என்கிற கேள்வி எழுந்தபோது, அன்றைய பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு ஒரு தெளிவான கருத்தை முன்வைத்தார்.
÷""இந்தியாவின் ஒற்றுமைக்கு மிக முக்கியமான பங்கு வகிப்பது தென்னிந்தியாதான். தென்னிந்திய மக்கள் "தில்லி மிகத் தொலைவில் இருக்கிறது' (தில்லி பஹுத் தூர் ஹை) என்று துளியும் நினைத்துவிடக் கூடாது. இந்தியாவின் குடியரசுத் தலைவர் வட நாட்டைச் சேர்ந்தவராக இருந்தால், குடியரசுத் துணைத் தலைவர் தென்னாட்டைச் சேர்ந்தவராகவும், குடியரசுத் தலைவர் தென்னாட்டைச் சேர்ந்தவராக இருந்தால் துணைத் தலைவர் வடநாட்டைச் சேர்நதவராகவும் இருக்க வேண்டும். அதேபோல, குடியரசுத் தலைவர் பதவி வடநாட்டவருக்கும் தென்னாட்டவருக்குமாக மாறிமாறி கிடைக்கும்படியான மரபும் கடைபிடிக்கப்பட வேண்டும்'' என்று தெளிவாகவும் தீர்க்கதரிசனத்துடனும் தனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்தியதுடன் நிற்கவில்லை.
÷குடியரசுத் தலைவர் பதவிக்கு அரசியல் சார்ந்தவர்கள் மட்டும்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிற கருத்தையும் பண்டித ஜவஹர்லால் நேரு ஏற்றுக் கொள்ளவில்லை. அறிஞர்கள் இந்தியாவின் முதல் குடிமகனாக வருவதுதான் சிறப்பாக இருக்கும் என்று கருதினார். "தத்துவ மேதை' டாக்டர் ராதாகிருஷ்ணனின் இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்வு பண்டித ஜவஹர்லால் நேருவின் தனிப்பட்ட தேர்வாக இருந்தது.
÷குடியரசுத் துணைத் தலைவராக இருப்பவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் மரபு முதன்முதலில் பிரதமர் இந்திரா காந்தியால் 1974-ல் மீறப்பட்டது. குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜி.எஸ். பதக்குக்கு பதிலாக பக்ருதீன் அலி அகமது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக 1977, 1982, 2002, 2007 தேர்தல்களிலும் இந்த மரபு மீறப்பட்டது.
ராஜேந்திரப் பிரசாத், ராதாகிருஷ்ணன், ஜாகீர் ஹுசைன், வி.வி. கிரி, பக்ருதீன் அலி அகமது, சஞ்சீவ ரெட்டி, ஜெயில் சிங், ஆர். வெங்கட்ராமன், சங்கர் தயாள் சர்மா, கே.ஆர். நாராயணன் என்று வடக்கும் தெற்கும் மாறி மாறிக் குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரித்த மரபு முதல் முறையாக மீறப்பட்டது ஏ.பி.ஜே. அப்துல் கலாம் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதுதான். அப்போதும்கூடத் துணைத் தலைவராக வடநாட்டைச் சேர்ந்த கிருஷ்ணகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
÷2007 குடியரசுத் தலைவர் தேர்தலின்போது மிகப்பெரிய மரபு மீறல் நிகழ்ந்தது. இத்தனைக்கும் அன்றைய குடியரசுத் தலைவர் தேர்தலில் முக்கிய பங்கு வகித்த கட்சி "வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது' என்று முழக்கமிட்டுத் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த திராவிட முன்னேற்றக் கழகம் என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை.
÷தென்னிந்தியரான (தமிழரான) ஏ.பி.ஜே. அப்துல் கலாமைத் தொடர்ந்து அடுத்த குடியரசுத் தலைவராக வடநாட்டைச் சேர்ந்த பிரதிபா பாட்டீல் வருவதைத் திமுக ஆதரித்ததில் தவறில்லை. மரபுப்படி வடநாட்டவர் குடியரசுத் தலைவராக வேண்டியதுதான் முறையும் கூட. ஆனால், குடியரசுத் துணைத் தலைவராகத் தென்னிந்தியர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று மரபு வழி நின்று திமுக குரல் கொடுத்திருக்க வேண்டாமா என்பதுதான் கேள்வி.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்குப் பிரதிபா பாட்டீலைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கத் திமுகவின் ஆதரவு இருந்தாக வேண்டும் என்கிற நிலைமையும் இருந்தது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
÷"தினமணி' தனது தலையங்கத்தின் மூலம் மரபு மீறப்படுவதை சுட்டிக்காட்டியது மட்டுமல்ல, ஏன் திமுகவின் பொதுச் செயலாளரான க. அன்பழகனைக் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்குப் பரிந்துரைக்கக் கூடாது என்று கேள்வியும் எழுப்பி இருந்தது. திமுக தலைவர் கருணாநிதி மட்டும் நினைத்திருந்தால், அவர் உண்மையிலேயே திராவிடப் பற்றாளராக இருந்திருந்தால் கே. அன்பழகனையோ, ஏன், "விடுதலை' கி. வீரமணியையோ கூடக் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்குப் பரிந்துரைத்து, அந்தப் பதவியில் அமர்த்திப் பெருமிதம் அடைந்திருக்க முடியும்.
÷அப்படிச் செய்திருந்தால் அல்லது குறைந்தபட்சம் ஒரு தென்னிந்தியர்தான் மரபுப்படி குடியரசுத் துணைத் தலைவராக வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்திருந்தால், இப்போதைய குடியரசுத் தேர்தலின் போக்கே மாறி இருக்கக் கூடும். அப்படி குடியரசுத் துணைத் தலைவராக இருக்கும் தென்னிந்தியரின் பெயர்தான் மரபுவழி குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்னணி வகிக்கும் பெயராக இருந்திருக்கும்.
÷இப்போது 13வது குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் மரபு மீறப்பட்டு தெற்கு வஞ்சிக்கப்படும் நிலைமை காணப்படுகிறது. மரபு வழி பார்த்தால், இந்த முறை குடியரசுத் தலைவர் பதவி ஒரு தென்னிந்தியருக்குத் தான் தரப்பட வேண்டும். அவர் தமிழரான ஏ.பி.ஜே. அப்துல் கலாமாக இருந்தாலும் சரி, கேரளம், கர்நாடகம், ஆந்திரத்தைச் சேர்ந்த ஒருவராக இருந்தாலும் சரி. ஆனால், குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராகத் தென்னிந்தியர் ஒருவரின் பெயர் கூடப் பேசப்படுவதில்லை.
÷இந்த முறை மீண்டும் வடநாட்டைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், பண்டித ஜவஹர்லால் நேரு தொடங்கி வைத்த மரபு, இந்தியாவின் ஒற்றுமையைக் கட்டிக் காக்க அவர் ஏற்படுத்திய மரபு மீறப்படுவது மட்டுமல்ல, இனி வரும் குடியரசுத் தலைவர் தேர்தல்களில் தென்னிந்தியர் யாருமே தேர்ந்தெடுக்கப்படாமல் போகும் நிலைமைகூட ஏற்பட்டாலும் ஏற்படலாம்; படும்!
÷அப்படி ஒரு நிலைமை ஏற்படக் காரணமாக இருந்தவர் என்கிற பெருமை கருணாநிதியைத்தான் சாரும் - தெற்கை வஞ்சித்து வடக்கு வளர்வதற்கு உதவிய பெருமை!
First Published : 10 May 2012 01:34:38 AM IST
Last Updated : 10 May 2012 07:02:50 AM IST
காலம் பொன்னானது
காலம் பொன்னானது
காலத்தின் அருமை கருதி பேச்சை விரைவில் முடிக்கிறேன் என்று நீட்டி முழங்கி மணிக்கணக்கில் அரங்கில் பேசி சோதிப்பவர்கள் இருக்கிறார்கள். காலத்தின் அருமையை நாம் உணர்வதில்லை. காலம் பொன்னானது.
எந்த ஒரு செயலாக்கத்துக்கும் தடங்கல் ஏற்பட்டால் இழப்பை ஈடுகட்ட முடியாது. உதாரணமாக, சென்னை விமானதள விரிவாக்கத்துக்கு 2003-ஆம் ஆண்டு தமிழக அரசால் சுமார் 1,450 ஏக்கர் ஒதுக்கப்பட்டது. ஆனால், சில அமைப்புகளின் எதிர்ப்பால் விரிவாக்கத்தில் தடங்கல் ஏற்பட்டது. விளைவு, சென்னையில் தேக்கநிலை, பெங்களுரூ, ஹைதராபாத் புதிய விமானதளம் அமைப்பதில் முந்திக்கொண்டது,
ஒரு கட்டமைப்புக்குத் தேவை தீர்க்கமான திட்டம், போதுமான நிதி, செயலாற்றுவதற்கான நிபுணர்கள், களப்பணியாளர்கள். இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும். கால அளவு நிர்ணயிப்பதுதான் மிக முக்கியம்.
எவ்வளவோ பயன் தரும் திட்டங்கள், குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்றப்படாததால், நிதி விரயமாகிறது. திட்டத்தின் பயனளிப்பு பெறுவதில் தடங்கல், அதைச்சார்ந்த நிறுவனங்களுக்கு இழப்பு, இதனால் பாதிக்கப்படும் குடும்பங்கள் என்று ஓர் இடத்தில் ஏற்படக்கூடிய தாமதம், நேர விரயம் அடுக்கடுக்காக காற்றலையாகப் பாதிப்பு ஏற்படுத்துகிறது.
ஒரு நாட்டின் வளமையை நிர்ணயிப்பதே அந்நாட்டு மக்கள் எவ்வாறு தமது நேரத்தைச் செலவிடுகிறார்கள் என்பதைப் பொருத்திருக்கிறது. முன்னேறிய நாடுகளில் வேலை செய்யும் பாங்கு, பணிக்கலாசாரம் மெச்சத்தக்கதாக இருக்கும். அநாவசியமாக வம்பளப்பது, தொலைபேசியில் பேசி காலம் கழிப்பது போன்ற சோம்பேறித்தனமான நடவடிக்கையைப் பார்க்க முடியாது.
இந்தியாவில் உள்ள பல பன்னாட்டு நிறுவனங்களிலும் இந்த ஒழுங்குமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. காலத்தின் அருமையை உணர்ந்ததால்தான் வளமான நாடுகளில் செல்வச் செழிப்பு நிலைக்கிறது.
நமது நாட்டில் சுதந்திரம் அடைந்த முதல் 30 ஆண்டுகள் சோஷலிச பொருளாதாரக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டது. பின்தங்கிய பகுதிகளுக்கும், ஏழை மக்களுக்கும் வளர்ச்சியின் பயன் சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கம் இருந்தாலும், நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள். "பெர்மிட் ராஜ்' என்ற வகையில் ஒவ்வொன்றுக்கு அரசு அனுமதி பெற வேண்டும் என்ற நிர்பந்தத்தில் தனி மனித வளர்ச்சியும் ஈடுபாடும் குன்றி தேக்க நிலைதான் தொடர்ந்தது. அப்போது நடைமுறைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் தவறு என்று இப்போது ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், விரயமான காலத்தை ஈடு செய்ய முடியுமா? அந்தத் தேக்க நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் இழப்பைத் திரும்பப் பெற முடியுமா?
வறுமையில் இழந்த வாலிபம்தான் திரும்புமா? அதைத்தான் ஜெயகாந்தன் "தைலியின் கதை' என்ற சிறுகதையில், கிழிந்த ஒத்தப்புடவையைக் குளித்துவிட்டுக் காய்ந்த பிறகு கட்டிக் கொள்ளும் தைலியின் நிலை 1947-இல் எவ்வாறு இருந்ததோ 25 ஆண்டுகளுக்குப் பிறகும் 1972-இல் மாறவில்லை என்று எழுதியிருந்தார். இன்னும் எவ்வளவோ தைலிகள் நாட்டில் இருக்கிறார்கள். கால விரயத்தின் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆப்பிள் கணினியை உருவாக்கி படங்கள், வீடியோக்கள் மற்றும் டிஜிட்டல் கோப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் முறையில் ஐ-பாட் மூலம் புரட்சி ஏற்படுத்தியவர் ஸ்டீவ் ஜாப்ஸ். விதி அவருக்கு எவ்வளவோ துரோகம் செய்தது. விவாகம் முடிக்காத இளம்மாணவிக்கு கூடா உறவு மூலம் பிறந்து, வேறொரு தம்பதியினரால் தத்து எடுக்கப்பட்டு, அவர்களுக்குப் பொருளாதார நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று தனது உயர் கல்வியைப் பாதியில் நிறுத்தி சுயமாகத் தொழில் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் கார் ஷெட்டில் கணினி வடிவமைக்கும் சிறு தொழிலைத் தொடங்கி வாழ்கையில் வெற்றி கண்டார். பல போராட்டங்களுக்கு இடையில் தன்னம்பிக்கை மற்றும் தனது நேரம், முழு உழைப்பையும் மூலதனமாக வைத்து உருவாக்கப்பட்ட நிறுவனம்தான் ஆப்பிள் மேக் கம்ப்யூட்டர். நாலாயிரம் பணியாளர்களைக் கொண்ட இரண்டு பில்லியன் டாலர் கம்பெனியாக இப்போது வளர்ந்துள்ளது.
ஐஃபோன், ஐ-பாட் இவையில்லாமல் வாழ்க்கையில்லை என்று உலகில் உள்ள இளைஞர்களை ஆட்கொண்ட சாதனையாளர் ஸ்டீவ் ஜாப்ஸ். நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர். எங்கு சென்றாலும் இளைஞர்களுக்கு அதன் அருமையை விளக்குவார்.
பல தோல்விகள் அவரைத் துரத்தின. ஆனால், தோல்வியைக் கண்டு துவளாமல் நேரத்தைப் புதிய யுக்திகளில் செலுத்தி வெற்றிப்பாதையை அமைத்துக் கொண்டார். நேரம் ஒன்றுதான் வற்றாத செல்வம். எல்லோருக்கும் சமமாகக் கிடைக்கும் மூலதனம்.
நேரம் எல்லாப் பணிகளுக்கும் முக்கியம் என்றாலும், காவல்துறையைப் பொருத்தமட்டில் நேரம் தவறினால் விபரீத விளைவுகள் ஏற்படும். உயிர், உடைமைகளைப் பாதிக்கும். குற்றங்களைத் தடுப்பதில் கவனம் செலுத்தி வியர்வை சிந்தினால் குற்ற நடப்புகளால் ஏற்படும் ரத்தச் சிதறல்களைத் தவிர்க்கலாம்.
எந்த ஒரு குற்ற நிகழ்வை எடுத்துக் கொண்டாலும், உரிய சமயத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் குற்ற நிகழ்வைத் தவிர்த்திருக்கலாமே என்று அந்த சரக அதிகாரிக்கு உள்ளூர நெஞ்சு குறுகுறுக்கும் என்பதில் ஐயமில்லை.
குற்றத்தடுப்பு செயலாக்கத்தில் அதிக கவனம் செலுத்துவதில்லை. நிகழ்ந்த குற்றங்களைக் கண்டுபிடித்துவிட்டால் காவல் துறை அதிகாரிகள் மெச்சப்படுகின்றனர். ஆனால், தனது உழைப்பால் குறித்த நேரத்தைத் தவறவிடாது பணி செய்து குற்ற நிகழ்வைத் தவிர்த்தவர் பாராட்டப்படுவதில்லை.
மாவோயிஸ்ட் பிரச்னை இவ்வளவு தலைவிரித்தாடுகிறது. மாவட்ட ஆட்சியர்கள் கடத்தப்படுகிறார்கள். இன்னும் அந்தப் பிரச்னைகளுக்கு முனைப்பான தீர்வு எடுக்கப்படவில்லை. மாநில அரசும், மத்திய அரசும் பல்முனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக பட்டியலிட்டாலும் பிரச்னை வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
ஒடிசா மாநிலத்தில் மால்காங்கிரி மாவட்ட ஆட்சியர் வினீல் கிருஷ்ணா கடத்தப்பட்டார். பின்பு இரண்டு இத்தாலி நாட்டுச் சுற்றுலாப் பயணிகள், சட்டசபை அங்கத்தினர், இப்போது சுக்மா ஆட்சியர் அலக்ஸ்பால் மேனன். மேனன் கடத்தலில் கொடுமை என்னவென்றால் அவரது இரண்டு பாதுகாவலர்களும் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டனர். மேனன் கடத்தல் நாட்டை உலுக்கியதே தவிர, இரண்டு காவலர்களின் உயிரிழப்புக்கு இரண்டு சொட்டுக் கண்ணீர்கூட எவரும் விடவில்லை. காவலர்களின் உயிர் அவ்வளவு துச்சமாகிவிட்டது.
மாவோயிஸ்டுகள் ஆதிக்கத்தில் உள்ள இடங்களுக்கு அரசு அதிகாரிகள் செல்லும்பொழுது பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்ற வேண்டும். ஏதோ ஓர் ஆர்வத்தில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாதுகாப்பு முறைகளை மறந்து களம் இறங்கிவிடுவதால் இத்தகைய விபரீதங்கள் நிகழ்கின்றன.
இரண்டு உயிர்களை இழந்த குடும்பங்களின் நிலை என்ன? வானம் பொழிந்தாலும் பூமி விளைந்தாலும் அந்தக் குடும்பங்களின் வாழ்வு கண்ணீரில்தான் தளும்பும். சட்டம் ஒழுங்குப் பிரச்னைகள் உரிய சமயத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறுவதால்தான் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்துகிறது. கரணம் தப்பினால் மரண அபாயம் தலைதூக்கும் என்பது காவல்துறைப் பணியில் அன்றாடம் உணரலாம்.
வாழ்வின் சாரம் மின்சாரம் என்ற அளவுக்கு மின்சாரத்தினால் இயங்கும் பல உபகரணங்களுக்கு நாம் அடிமையாகி விட்டோம். மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் உரிய நேரத்தில் திட்டமிட்டு உற்பத்தியைப் பெருக்காதது ஒரு முக்கியக் காரணம்.
அந்த உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காததால் விளைவுகளை இப்போது சந்திக்க நேரிடுகிறது. இப்போது எடுக்கப்படும் முயற்சிகளால் அதுவும் பசுமை சக்தி எனப்படும் சூரிய சக்தியை அறுவடை செய்யும் பல்முனை முயற்சி மின்சாரம் பற்றாக்குறை என்ற நிலை மாற வழி வகுக்கும். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் ஆண்டுக்கு 310 நாள்கள் சூரிய சக்தி பயனளிப்புக்குக் கொண்டு வரமுடியும் என்று நிபுணர்கள் ஆய்வில் தெரிய வருகிறது. அரசும் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சம்பந்தப்பட்ட பொறியாளர்களும், அதிகாரிகளும், காலந்தாழ்த்தாது போர்க்கால அடிப்படையில் சக்தி ஈட்டும் கதிர் தளங்களை அமைக்க வேண்டும்.
குஜராத்தில் 16 மாதங்களில் இத்தகைய சூரியசக்தி ஈட்டக்கூடிய சோலார் கருவிகள் அமைக்கப்பட்டு பயனளிப்புக்கு வந்துள்ளது. இது நிச்சயமாக நம்மாலும் முடியும். "காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும் ஞாலத்தின் மாணப் பெரிது' என்றார் வள்ளுவர். அரசின் நலத்திட்டங்கள் உரிய சமயத்தில் ஏழை மக்களுக்கு அளித்தால் பெரிதும் உதவும்.
நமது முதலமைச்சர் அறிவித்த பல நலத்திட்டங்கள் துரிதமாக நடைமுறைப்படுத்தப்பட்டது நிறைவைத் தருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக் கணினி, இருபது கிலோ இலவச அரிசி, மாணவர்களுக்கு காலணி, சீருடை, புத்தகங்கள், ஏழை மக்களின் வாழ்வாதாரத்துக்கு ஆடு வளர்க்கும் திட்டம் போன்ற பல திட்டங்களில் ஏழை மக்களுக்குத் தக்க சமயத்தில் உதவி அளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 1.51 லட்சம் மடிக் கணினிகளும், 1.85 கோடி குடும்பங்களுக்கு இலவச அரிசியும், 14.38 லட்சம் மக்களுக்கு இலவச மின்விசிறி, மின் அரைவை இயந்திரம், 81.20 லட்சம் குழந்தைகளுக்கு காலணிகள், புத்தகங்கள் கடந்த ஒரு வருடத்தில் உரியவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது மகத்தான சாதனை. இது காலத்தினால் செய்த உதவி.
ஏழைக் குடும்பங்கள் இதைச் சரியாகப் பயன்படுத்தி ஏதோ இலவசமாகக் கிடைத்தது என்று சோம்பி இருக்காமல் மேலும் உத்வேகத்துடன் உழைத்தால்தான் குடும்பம் முன்னேறும், சமுதாயம் வளம் பெரும்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள "தொலைநோக்குப் பார்வை 2023' இசைத்தமிழ்போல் தமிழ்நாட்டுக்குத் தொழில் சாதனையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு 1.50 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் முக்கியமாக கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் அடுத்து வரும் ஆண்டுகளில் நிறைவேற்றப்படும். "விஷன் 2023' பொருளாதார, நிர்வாக நிபுணர்களின் பெருமளவு பாராட்டைப் பெற்றுள்ளது.
இவ்வாறு இலக்குகள் நிர்ணயிப்பது அவசியம். இத்திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவதற்கு நிதி மட்டுமன்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் முனைப்பான செயலாக்கம் அவசியம். சுய ஆர்வத்தோடு செயல்படுபவர்களைத் தெரிவு செய்து அவர்கள் நிபுணத்துவம் பெற்ற துறைகளுக்கு நியமித்தால் திட்டங்கள் காலதாமதமின்றி நிறைவேறும்.
வாழ்க்கையை நேசிப்பவர்கள் நேரத்தை விரயமாக்கக் கூடாது. வாழ்க்கையில் சாதனைபடைத்தவர்கள் எல்லோரும் நேரத்தைத் திறமையாகப் பயன்படுத்துவதைப் பழக்கமாகக் கொண்டவர்கள்.
என்னமாய் நேரம் பறக்கிறது என்று அங்கலாய்க்கிறோம். கடந்த நேரம் திரும்பி வராது. ஆனால், தற்கால நேரம் நமது கையில். நேரம் பறந்தாலும் விமான ஓட்டி நாம்தான் என்பது எவ்வளவு உண்மை. நேரத்தை வெறுமையில் ஓட்டாமல் சமுதாயத்துக்கு ஒட்டும்படி பயனளிக்கும் வகையில் செலவிடுவதே விவேகம்.
எந்த ஒரு செயலாக்கத்துக்கும் தடங்கல் ஏற்பட்டால் இழப்பை ஈடுகட்ட முடியாது. உதாரணமாக, சென்னை விமானதள விரிவாக்கத்துக்கு 2003-ஆம் ஆண்டு தமிழக அரசால் சுமார் 1,450 ஏக்கர் ஒதுக்கப்பட்டது. ஆனால், சில அமைப்புகளின் எதிர்ப்பால் விரிவாக்கத்தில் தடங்கல் ஏற்பட்டது. விளைவு, சென்னையில் தேக்கநிலை, பெங்களுரூ, ஹைதராபாத் புதிய விமானதளம் அமைப்பதில் முந்திக்கொண்டது,
ஒரு கட்டமைப்புக்குத் தேவை தீர்க்கமான திட்டம், போதுமான நிதி, செயலாற்றுவதற்கான நிபுணர்கள், களப்பணியாளர்கள். இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும். கால அளவு நிர்ணயிப்பதுதான் மிக முக்கியம்.
எவ்வளவோ பயன் தரும் திட்டங்கள், குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்றப்படாததால், நிதி விரயமாகிறது. திட்டத்தின் பயனளிப்பு பெறுவதில் தடங்கல், அதைச்சார்ந்த நிறுவனங்களுக்கு இழப்பு, இதனால் பாதிக்கப்படும் குடும்பங்கள் என்று ஓர் இடத்தில் ஏற்படக்கூடிய தாமதம், நேர விரயம் அடுக்கடுக்காக காற்றலையாகப் பாதிப்பு ஏற்படுத்துகிறது.
ஒரு நாட்டின் வளமையை நிர்ணயிப்பதே அந்நாட்டு மக்கள் எவ்வாறு தமது நேரத்தைச் செலவிடுகிறார்கள் என்பதைப் பொருத்திருக்கிறது. முன்னேறிய நாடுகளில் வேலை செய்யும் பாங்கு, பணிக்கலாசாரம் மெச்சத்தக்கதாக இருக்கும். அநாவசியமாக வம்பளப்பது, தொலைபேசியில் பேசி காலம் கழிப்பது போன்ற சோம்பேறித்தனமான நடவடிக்கையைப் பார்க்க முடியாது.
இந்தியாவில் உள்ள பல பன்னாட்டு நிறுவனங்களிலும் இந்த ஒழுங்குமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. காலத்தின் அருமையை உணர்ந்ததால்தான் வளமான நாடுகளில் செல்வச் செழிப்பு நிலைக்கிறது.
நமது நாட்டில் சுதந்திரம் அடைந்த முதல் 30 ஆண்டுகள் சோஷலிச பொருளாதாரக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டது. பின்தங்கிய பகுதிகளுக்கும், ஏழை மக்களுக்கும் வளர்ச்சியின் பயன் சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கம் இருந்தாலும், நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள். "பெர்மிட் ராஜ்' என்ற வகையில் ஒவ்வொன்றுக்கு அரசு அனுமதி பெற வேண்டும் என்ற நிர்பந்தத்தில் தனி மனித வளர்ச்சியும் ஈடுபாடும் குன்றி தேக்க நிலைதான் தொடர்ந்தது. அப்போது நடைமுறைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் தவறு என்று இப்போது ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், விரயமான காலத்தை ஈடு செய்ய முடியுமா? அந்தத் தேக்க நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் இழப்பைத் திரும்பப் பெற முடியுமா?
வறுமையில் இழந்த வாலிபம்தான் திரும்புமா? அதைத்தான் ஜெயகாந்தன் "தைலியின் கதை' என்ற சிறுகதையில், கிழிந்த ஒத்தப்புடவையைக் குளித்துவிட்டுக் காய்ந்த பிறகு கட்டிக் கொள்ளும் தைலியின் நிலை 1947-இல் எவ்வாறு இருந்ததோ 25 ஆண்டுகளுக்குப் பிறகும் 1972-இல் மாறவில்லை என்று எழுதியிருந்தார். இன்னும் எவ்வளவோ தைலிகள் நாட்டில் இருக்கிறார்கள். கால விரயத்தின் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆப்பிள் கணினியை உருவாக்கி படங்கள், வீடியோக்கள் மற்றும் டிஜிட்டல் கோப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் முறையில் ஐ-பாட் மூலம் புரட்சி ஏற்படுத்தியவர் ஸ்டீவ் ஜாப்ஸ். விதி அவருக்கு எவ்வளவோ துரோகம் செய்தது. விவாகம் முடிக்காத இளம்மாணவிக்கு கூடா உறவு மூலம் பிறந்து, வேறொரு தம்பதியினரால் தத்து எடுக்கப்பட்டு, அவர்களுக்குப் பொருளாதார நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று தனது உயர் கல்வியைப் பாதியில் நிறுத்தி சுயமாகத் தொழில் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் கார் ஷெட்டில் கணினி வடிவமைக்கும் சிறு தொழிலைத் தொடங்கி வாழ்கையில் வெற்றி கண்டார். பல போராட்டங்களுக்கு இடையில் தன்னம்பிக்கை மற்றும் தனது நேரம், முழு உழைப்பையும் மூலதனமாக வைத்து உருவாக்கப்பட்ட நிறுவனம்தான் ஆப்பிள் மேக் கம்ப்யூட்டர். நாலாயிரம் பணியாளர்களைக் கொண்ட இரண்டு பில்லியன் டாலர் கம்பெனியாக இப்போது வளர்ந்துள்ளது.
ஐஃபோன், ஐ-பாட் இவையில்லாமல் வாழ்க்கையில்லை என்று உலகில் உள்ள இளைஞர்களை ஆட்கொண்ட சாதனையாளர் ஸ்டீவ் ஜாப்ஸ். நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர். எங்கு சென்றாலும் இளைஞர்களுக்கு அதன் அருமையை விளக்குவார்.
பல தோல்விகள் அவரைத் துரத்தின. ஆனால், தோல்வியைக் கண்டு துவளாமல் நேரத்தைப் புதிய யுக்திகளில் செலுத்தி வெற்றிப்பாதையை அமைத்துக் கொண்டார். நேரம் ஒன்றுதான் வற்றாத செல்வம். எல்லோருக்கும் சமமாகக் கிடைக்கும் மூலதனம்.
நேரம் எல்லாப் பணிகளுக்கும் முக்கியம் என்றாலும், காவல்துறையைப் பொருத்தமட்டில் நேரம் தவறினால் விபரீத விளைவுகள் ஏற்படும். உயிர், உடைமைகளைப் பாதிக்கும். குற்றங்களைத் தடுப்பதில் கவனம் செலுத்தி வியர்வை சிந்தினால் குற்ற நடப்புகளால் ஏற்படும் ரத்தச் சிதறல்களைத் தவிர்க்கலாம்.
எந்த ஒரு குற்ற நிகழ்வை எடுத்துக் கொண்டாலும், உரிய சமயத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் குற்ற நிகழ்வைத் தவிர்த்திருக்கலாமே என்று அந்த சரக அதிகாரிக்கு உள்ளூர நெஞ்சு குறுகுறுக்கும் என்பதில் ஐயமில்லை.
குற்றத்தடுப்பு செயலாக்கத்தில் அதிக கவனம் செலுத்துவதில்லை. நிகழ்ந்த குற்றங்களைக் கண்டுபிடித்துவிட்டால் காவல் துறை அதிகாரிகள் மெச்சப்படுகின்றனர். ஆனால், தனது உழைப்பால் குறித்த நேரத்தைத் தவறவிடாது பணி செய்து குற்ற நிகழ்வைத் தவிர்த்தவர் பாராட்டப்படுவதில்லை.
மாவோயிஸ்ட் பிரச்னை இவ்வளவு தலைவிரித்தாடுகிறது. மாவட்ட ஆட்சியர்கள் கடத்தப்படுகிறார்கள். இன்னும் அந்தப் பிரச்னைகளுக்கு முனைப்பான தீர்வு எடுக்கப்படவில்லை. மாநில அரசும், மத்திய அரசும் பல்முனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக பட்டியலிட்டாலும் பிரச்னை வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
ஒடிசா மாநிலத்தில் மால்காங்கிரி மாவட்ட ஆட்சியர் வினீல் கிருஷ்ணா கடத்தப்பட்டார். பின்பு இரண்டு இத்தாலி நாட்டுச் சுற்றுலாப் பயணிகள், சட்டசபை அங்கத்தினர், இப்போது சுக்மா ஆட்சியர் அலக்ஸ்பால் மேனன். மேனன் கடத்தலில் கொடுமை என்னவென்றால் அவரது இரண்டு பாதுகாவலர்களும் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டனர். மேனன் கடத்தல் நாட்டை உலுக்கியதே தவிர, இரண்டு காவலர்களின் உயிரிழப்புக்கு இரண்டு சொட்டுக் கண்ணீர்கூட எவரும் விடவில்லை. காவலர்களின் உயிர் அவ்வளவு துச்சமாகிவிட்டது.
மாவோயிஸ்டுகள் ஆதிக்கத்தில் உள்ள இடங்களுக்கு அரசு அதிகாரிகள் செல்லும்பொழுது பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்ற வேண்டும். ஏதோ ஓர் ஆர்வத்தில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாதுகாப்பு முறைகளை மறந்து களம் இறங்கிவிடுவதால் இத்தகைய விபரீதங்கள் நிகழ்கின்றன.
இரண்டு உயிர்களை இழந்த குடும்பங்களின் நிலை என்ன? வானம் பொழிந்தாலும் பூமி விளைந்தாலும் அந்தக் குடும்பங்களின் வாழ்வு கண்ணீரில்தான் தளும்பும். சட்டம் ஒழுங்குப் பிரச்னைகள் உரிய சமயத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறுவதால்தான் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்துகிறது. கரணம் தப்பினால் மரண அபாயம் தலைதூக்கும் என்பது காவல்துறைப் பணியில் அன்றாடம் உணரலாம்.
வாழ்வின் சாரம் மின்சாரம் என்ற அளவுக்கு மின்சாரத்தினால் இயங்கும் பல உபகரணங்களுக்கு நாம் அடிமையாகி விட்டோம். மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் உரிய நேரத்தில் திட்டமிட்டு உற்பத்தியைப் பெருக்காதது ஒரு முக்கியக் காரணம்.
அந்த உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காததால் விளைவுகளை இப்போது சந்திக்க நேரிடுகிறது. இப்போது எடுக்கப்படும் முயற்சிகளால் அதுவும் பசுமை சக்தி எனப்படும் சூரிய சக்தியை அறுவடை செய்யும் பல்முனை முயற்சி மின்சாரம் பற்றாக்குறை என்ற நிலை மாற வழி வகுக்கும். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் ஆண்டுக்கு 310 நாள்கள் சூரிய சக்தி பயனளிப்புக்குக் கொண்டு வரமுடியும் என்று நிபுணர்கள் ஆய்வில் தெரிய வருகிறது. அரசும் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சம்பந்தப்பட்ட பொறியாளர்களும், அதிகாரிகளும், காலந்தாழ்த்தாது போர்க்கால அடிப்படையில் சக்தி ஈட்டும் கதிர் தளங்களை அமைக்க வேண்டும்.
குஜராத்தில் 16 மாதங்களில் இத்தகைய சூரியசக்தி ஈட்டக்கூடிய சோலார் கருவிகள் அமைக்கப்பட்டு பயனளிப்புக்கு வந்துள்ளது. இது நிச்சயமாக நம்மாலும் முடியும். "காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும் ஞாலத்தின் மாணப் பெரிது' என்றார் வள்ளுவர். அரசின் நலத்திட்டங்கள் உரிய சமயத்தில் ஏழை மக்களுக்கு அளித்தால் பெரிதும் உதவும்.
நமது முதலமைச்சர் அறிவித்த பல நலத்திட்டங்கள் துரிதமாக நடைமுறைப்படுத்தப்பட்டது நிறைவைத் தருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக் கணினி, இருபது கிலோ இலவச அரிசி, மாணவர்களுக்கு காலணி, சீருடை, புத்தகங்கள், ஏழை மக்களின் வாழ்வாதாரத்துக்கு ஆடு வளர்க்கும் திட்டம் போன்ற பல திட்டங்களில் ஏழை மக்களுக்குத் தக்க சமயத்தில் உதவி அளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 1.51 லட்சம் மடிக் கணினிகளும், 1.85 கோடி குடும்பங்களுக்கு இலவச அரிசியும், 14.38 லட்சம் மக்களுக்கு இலவச மின்விசிறி, மின் அரைவை இயந்திரம், 81.20 லட்சம் குழந்தைகளுக்கு காலணிகள், புத்தகங்கள் கடந்த ஒரு வருடத்தில் உரியவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது மகத்தான சாதனை. இது காலத்தினால் செய்த உதவி.
ஏழைக் குடும்பங்கள் இதைச் சரியாகப் பயன்படுத்தி ஏதோ இலவசமாகக் கிடைத்தது என்று சோம்பி இருக்காமல் மேலும் உத்வேகத்துடன் உழைத்தால்தான் குடும்பம் முன்னேறும், சமுதாயம் வளம் பெரும்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள "தொலைநோக்குப் பார்வை 2023' இசைத்தமிழ்போல் தமிழ்நாட்டுக்குத் தொழில் சாதனையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு 1.50 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் முக்கியமாக கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் அடுத்து வரும் ஆண்டுகளில் நிறைவேற்றப்படும். "விஷன் 2023' பொருளாதார, நிர்வாக நிபுணர்களின் பெருமளவு பாராட்டைப் பெற்றுள்ளது.
இவ்வாறு இலக்குகள் நிர்ணயிப்பது அவசியம். இத்திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவதற்கு நிதி மட்டுமன்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் முனைப்பான செயலாக்கம் அவசியம். சுய ஆர்வத்தோடு செயல்படுபவர்களைத் தெரிவு செய்து அவர்கள் நிபுணத்துவம் பெற்ற துறைகளுக்கு நியமித்தால் திட்டங்கள் காலதாமதமின்றி நிறைவேறும்.
வாழ்க்கையை நேசிப்பவர்கள் நேரத்தை விரயமாக்கக் கூடாது. வாழ்க்கையில் சாதனைபடைத்தவர்கள் எல்லோரும் நேரத்தைத் திறமையாகப் பயன்படுத்துவதைப் பழக்கமாகக் கொண்டவர்கள்.
என்னமாய் நேரம் பறக்கிறது என்று அங்கலாய்க்கிறோம். கடந்த நேரம் திரும்பி வராது. ஆனால், தற்கால நேரம் நமது கையில். நேரம் பறந்தாலும் விமான ஓட்டி நாம்தான் என்பது எவ்வளவு உண்மை. நேரத்தை வெறுமையில் ஓட்டாமல் சமுதாயத்துக்கு ஒட்டும்படி பயனளிக்கும் வகையில் செலவிடுவதே விவேகம்.
First Published : 16 May 2012 12:51:21 AM IST
Monday, 23 April 2012
Sunday, 22 April 2012
Thursday, 19 April 2012
Wednesday, 18 April 2012
Tuesday, 17 April 2012
அமெரிக்கா தரும் பாடம்.....
These people are same in America bcoz that country is seeing that both are human beings not seeing them as personalities. But in India????? If it is a good lesson we can learn from anybody in this case from america...... An example is here for you.........
by Mathi Lakshmanan.
அமெரிக்காவில் நியூயார்க் விமான நிலையத்தில் நடிகர் ஷாரூக் கான் இடப்பெயர்வு சான்றளிப்புக்காக இரண்டு மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். தடுத்து நிறுத்திவிட்டு மன்னிப்புக் கேட்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறது அமெரிக்கா என்றும்கூட அவர் குறிப்பிட்டார்.
source: dinamani.
Monday, 16 April 2012
இரு மொழி அறிவு உடம்புக்கு நல்லது
தற்காலம் விரைவான உலகமயமாக்கல் பரவிக் கொண்டிருக்கிற காலம். தாய்மொழியோடு கூடுதலாக ஓரிரு மொழிகளைக் கற்றுத் தேர்ந்தால் பிற மாநில மற்றும் நாட்டு மக்களுடன் உறவாடவும், பணியாற்றவும், வர்த்தகத் தொடர்பு கொள்ளவும் உதவியாயிருக்கும்.
இதற்கும் மேலாகப் பன்மொழித் தேர்ச்சி உடலளவிலும் மனதளவிலும் அ0டிப்படையான அனுகூலங்களை அளிப்பதாக அண்மைக்கால ஆய்வுகளின் மூலம் அறிவியலார் அறிவித்திருக்கிறார்கள். இரண்டே மொழிகளை அறிந்திருப்பது கூட மூளையின் அறிவு சார்ந்த ஆற்றலை அதிகரிக்கிறது. அதன் செயல்பாட்டில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இருப்பை உணர்ந்து இனம் காணும் திறன்களைக் கூர்மையாக்குகிறது.
கடந்த இருபதாம் நூற்றாண்டில் குழந்தைகளுக்குத் தாய்மொழியோடு கூடுதலாக மொழிகளைக் கற்பித்தல் அனுபவ அறிவுத்திறன் வளர்ச்சிக்கு இடையூறு செய்து கல்வி மற்றும் அறிவாற்றல் வளர்ச்சிக்குக் குந்தகம் விளைவிக்கும் என உளவியலாளர்களும், கல்வியாளர்களும் கொள்கை வகுப்பாளர்களும் கருதியிருந்தார்கள். ஆனால், அண்மை ஆய்வுகள் இருமொழித் திறன் அனுபவ அறிவு வளர்ச்சியில் ஆக்கப்பூர்வமான தாக்கத்தையே ஏற்படுத்துவதாகக் காட்டுகின்றன.
மூளையில் வெவ்வேறு மொழித் திறன்கள் வெவ்வேறு நினைவுப் பகுதிகளில் பதிவாகின்றன. ஒருவர் தானறிந்த மொழிகளில் ஒன்றைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது மற்ற நினைவுப்பகுதிகள் இயங்குவது தணிக்கையாகிறது.
இது தனக்குள் நிகழும் குறுக்கீடுகளைச் சீர்செய்து தேர்வு செய்து தேவையான நினைவுப் பகுதியை மட்டும் ஓங்கிச் செயல்பட வைக்கும் பயிற்சியை மூளைக்கு அளிக்கிறது. அதன் காரணமாக அனுபவ அறிவுத்திறன்களுக்கு வலுவூட்டும் பயிற்சிகளை மனம் மேற்கொள்ளத் தூண்டப்படுகிறது.
எல்லன் பியாலிஸ்டாக், மைக்கேல் மார்ட்டின் ரீ என்ற இரண்டு உளவியல் ஆய்வர்கள் மழலையர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் 2004-ம் ஆண்டில் செய்த ஆய்வுகள் சிலவகையான மனக்கணக்குகளுக்கும் புதிர்களுக்கும் விரைவாக விடை காண்பதில் இரு மொழியினர் ஒற்றை மொழியினரை விட அதிகத் திறமை பெற்றிருப்பதாகக் காட்டின.
ஆங்கிலம் மட்டுமே பேசப்படுகிற குடும்பங்களின் குழந்தைகள் ஒரு குழுவாகவும் ஆங்கிலமும் பிரெஞ்சு மொழியும் பேசப்படும் குடும்பங்களின் குழந்தைகள் ஒரு குழுவாகவும் சோதனை செய்யப்பட்டனர். ஒரு கணினித்திரையில் நீல நிறச் சதுரம் வரையப்பட்ட ஒரு குப்பைக்கூடையும் சிவப்பு நிறவட்டம் வரையப்பட்ட ஒரு குப்பைக்கூடையும் காட்டப்பட்டன. திரையில் நீல நிற வட்டங்களும் சிவப்பு நிறச் சதுரங்களும் ஒவ்வொன்றாகத் தோன்றும்.
முதல் சோதனையில் குழந்தைகள் விசையைப் பயன்படுத்தி நீல வட்டங்களை நீலச் சதுரக் கூடையிலும் சிவப்புச் சதுரங்களை சிவப்பு வட்டமுள்ள கூடையிலும் போய் விழுமாறு செய்ய வேண்டும். இரு குழுவினரும் நிறத்தின் அடிப்படையில் வட்டங்களையும் சதுரங்களையும் எளிதாகப் பிரித்தறிய முடிந்தது புலனாயிற்று.
அடுத்த கட்டச் சோதனையில் வடிவத்தின் அடிப்படையில் பிரித்து நீல வட்டங்களைச் சிவப்பு வட்டமுள்ள கூடையிலும் சிவப்புச் சதுரங்களை நீலச் சதுரமுள்ள கூடையிலும் விழச் செய்யுமாறு குழந்தைகள் பணிக்கப்பட்டன. இந்தச் சோதனையில் இரு மொழியினர் ஒற்றை மொழியினரை விட விரைவாகவும் திறமையுடனும் செயல்பட்டனர். நிற முரண்பாட்டினால் அவர்கள் குழம்பிவிடவில்லை.
இத்தகைய சோதனைகள் மூலம் கிடைத்த தரவுகள் இரு மொழித் திறன் மூளையின் நிர்வாகத் திறனை மேம்படுத்துவதாகக் காட்டுகின்றன. மூளையின் நிர்வாகச் செயல் பகுதி திட்டமிடுதல், பிரச்னைக்குத் தீர்வு காணல், சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய பணிகள் போன்றவற்றை நிகழ்த்தத் தேவையான கவனக் குவிப்பு ஆணைகளை வெளியிடுகிறது. ஒரு பணியில் முனைந்திருக்கையில் கவனத்தைத் திசை திருப்பும் புறக்காரணிகளைப் புறந்தள்ளிச் செய்து கொண்டிருக்கும் பணியில் கவனத்தைக் குவிக்க வேண்டியிருக்கும். ஒரே சமயத்தில் இரண்டு பணிகளை மாற்றி மாற்றிச் செய்ய நேரிடும்போது, ஒரு பணிக்கான தரவுகளை மனதில் தேக்கி வைத்துக்கொண்டு மற்ற பணியைச் செய்ய வேண்டியிருக்கும்.
எடுத்துக்காட்டாக, ஒரு சாலையில் காரை ஓட்டிச் செல்பவர் கண்ணெதிரில் தெரியும் காட்சிகளைக் கண்காணித்தவாறே, எந்தச் சாலைச் சந்திப்பில், எந்தத் திசையில் திரும்ப வேண்டும் என்பன போன்ற தரவுகளையும் நினைவில்கொண்டு வந்து கொண்டேயிருக்க வேண்டும். இதற்கான செயல்முறைகளை மூளையின் நிர்வாக ஆணையம் வகுத்து வழிகாட்டுகிறது. இரு மொழித் திறன் அந்த ஆணையத்தை வலுவானதாக ஆக்குகிறது.
திசை திருப்பும் புறக்காரணிகள் தணிக்கப்பட வேண்டாத சூழ்நிலைகளில்கூட இரு மொழியர்கள் அதிகச் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். ஒரு சோதனையில் ஒரு தாளில் எண்கள் அள்ளித் தெளித்தாற்போல எழுதப்பட்டிருந்தன. குழந்தைகள் ஒன்றிலிருந்து ஆரம்பித்து ஏறு வரிசையில் எண்களைக் கோடு போட்டு இணைக்கப் பணிக்கப்பட்டன. இதிலும் இரு மொழியர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர்.
இரு மொழியர்கள் சுற்றுச்சூழலைத் தொடர்ந்து கணிக்க வேண்டியிருக்கிறது. உதாரணமாகப் பல மொழிகள் புழங்கும் ஹைதராபாத் போன்ற நகரில் வாழும் ஒரு தமிழ்க் குழந்தை தன் பெற்றோரிடம் தமிழிலும், ஆயாவுடன் தெலுங்கிலும் பேச வேண்டியிருக்கும்.
வெளியே சென்றால் சிலரிடம் ஆங்கிலத்திலும் வேறு சிலருடன் உருது மொழியிலும் உரையாட வேண்டியிருக்கும். காரோட்டி சாலையிலேற்படும் காட்சி மாற்றங்களைத் தொடர்ந்து கணிக்க வேண்டியிருப்பதைப்போலவே அக் குழந்தையும் சுற்றுவட்டாரத்தின் மாற்றங்களைத் தொடர்ந்து கணிக்க வேண்டியிருப்பதாக ஆல்பர்ட் கோஸ்டா என்ற ஆய்வர் கூறுகிறார். இப் பயிற்சி அக்குழந்தையின் மூளையிலுள்ள கண்காணிப்புப் பகுதி குறைந்த உழைப்பில் அதிகச் செயலுறு திறனுடன் இயங்கச் செய்வதாக அவர் விவரிக்கிறார்.
இரு மொழித் திறன் சிசுப் பருவம் முதல் முதுமை வரை மூளையில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரு மொழிச் சூழலில் வளர்ந்து, பின்னர் ஒரு இரண்டாவது மொழியைக் கற்றுக் கொள்கிறவர்களிடமும் இவ்வாறான தாக்கத்தைக் காண முடிகிறது.
2009-ம் ஆண்டில் ஆக்னஸ் கோவாக்ஸ் என்ற இத்தாலிய ஆய்வர் இரு மொழி பேசும் குடும்பங்களிலிருந்தும் ஒற்றை மொழி பேசும் குடும்பங்களிலிருந்தும் ஏழு மாதக் குழந்தைகளைத் திரட்டி ஒரு சோதனை செய்தார். ஒரு பெரிய கணினித் திரையின் முன்னால் அவர்களை இருத்தினார். ஒரு மணியை ஒலித்ததும் திரையின் வலது மேல் கோடியில் ஒரு பொம்மை தோன்றும்படி செய்தார்.
சிலமுறை இவ்வாறு செய்தபின் எல்லாக் குழந்தைகளும் மணியடித்ததும் தலையைத் திருப்பித் திரையின் வலது கோடியைப் பார்த்துப் பொம்மை தோன்றுவதை ரசித்தன. அடுத்த கட்டத்தில் மணியடித்ததும் பொம்மை திரையின் இடது கீழ்க் கோடியில் மாறித் தோன்றியது. இரு மொழிக் குடும்பக் குழந்தைகள் உடனடியாகப் பார்வையைத் திசை மாற்றிச் செலுத்தப் பழகி விட்டன. ஒரு மொழிக் குடும்பக் குழந்தைகளுக்கு அது பிடிபடவேயில்லை.
இதற்கும் மேலாகப் பன்மொழித் தேர்ச்சி உடலளவிலும் மனதளவிலும் அ0டிப்படையான அனுகூலங்களை அளிப்பதாக அண்மைக்கால ஆய்வுகளின் மூலம் அறிவியலார் அறிவித்திருக்கிறார்கள். இரண்டே மொழிகளை அறிந்திருப்பது கூட மூளையின் அறிவு சார்ந்த ஆற்றலை அதிகரிக்கிறது. அதன் செயல்பாட்டில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இருப்பை உணர்ந்து இனம் காணும் திறன்களைக் கூர்மையாக்குகிறது.
கடந்த இருபதாம் நூற்றாண்டில் குழந்தைகளுக்குத் தாய்மொழியோடு கூடுதலாக மொழிகளைக் கற்பித்தல் அனுபவ அறிவுத்திறன் வளர்ச்சிக்கு இடையூறு செய்து கல்வி மற்றும் அறிவாற்றல் வளர்ச்சிக்குக் குந்தகம் விளைவிக்கும் என உளவியலாளர்களும், கல்வியாளர்களும் கொள்கை வகுப்பாளர்களும் கருதியிருந்தார்கள். ஆனால், அண்மை ஆய்வுகள் இருமொழித் திறன் அனுபவ அறிவு வளர்ச்சியில் ஆக்கப்பூர்வமான தாக்கத்தையே ஏற்படுத்துவதாகக் காட்டுகின்றன.
மூளையில் வெவ்வேறு மொழித் திறன்கள் வெவ்வேறு நினைவுப் பகுதிகளில் பதிவாகின்றன. ஒருவர் தானறிந்த மொழிகளில் ஒன்றைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது மற்ற நினைவுப்பகுதிகள் இயங்குவது தணிக்கையாகிறது.
இது தனக்குள் நிகழும் குறுக்கீடுகளைச் சீர்செய்து தேர்வு செய்து தேவையான நினைவுப் பகுதியை மட்டும் ஓங்கிச் செயல்பட வைக்கும் பயிற்சியை மூளைக்கு அளிக்கிறது. அதன் காரணமாக அனுபவ அறிவுத்திறன்களுக்கு வலுவூட்டும் பயிற்சிகளை மனம் மேற்கொள்ளத் தூண்டப்படுகிறது.
எல்லன் பியாலிஸ்டாக், மைக்கேல் மார்ட்டின் ரீ என்ற இரண்டு உளவியல் ஆய்வர்கள் மழலையர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் 2004-ம் ஆண்டில் செய்த ஆய்வுகள் சிலவகையான மனக்கணக்குகளுக்கும் புதிர்களுக்கும் விரைவாக விடை காண்பதில் இரு மொழியினர் ஒற்றை மொழியினரை விட அதிகத் திறமை பெற்றிருப்பதாகக் காட்டின.
ஆங்கிலம் மட்டுமே பேசப்படுகிற குடும்பங்களின் குழந்தைகள் ஒரு குழுவாகவும் ஆங்கிலமும் பிரெஞ்சு மொழியும் பேசப்படும் குடும்பங்களின் குழந்தைகள் ஒரு குழுவாகவும் சோதனை செய்யப்பட்டனர். ஒரு கணினித்திரையில் நீல நிறச் சதுரம் வரையப்பட்ட ஒரு குப்பைக்கூடையும் சிவப்பு நிறவட்டம் வரையப்பட்ட ஒரு குப்பைக்கூடையும் காட்டப்பட்டன. திரையில் நீல நிற வட்டங்களும் சிவப்பு நிறச் சதுரங்களும் ஒவ்வொன்றாகத் தோன்றும்.
முதல் சோதனையில் குழந்தைகள் விசையைப் பயன்படுத்தி நீல வட்டங்களை நீலச் சதுரக் கூடையிலும் சிவப்புச் சதுரங்களை சிவப்பு வட்டமுள்ள கூடையிலும் போய் விழுமாறு செய்ய வேண்டும். இரு குழுவினரும் நிறத்தின் அடிப்படையில் வட்டங்களையும் சதுரங்களையும் எளிதாகப் பிரித்தறிய முடிந்தது புலனாயிற்று.
அடுத்த கட்டச் சோதனையில் வடிவத்தின் அடிப்படையில் பிரித்து நீல வட்டங்களைச் சிவப்பு வட்டமுள்ள கூடையிலும் சிவப்புச் சதுரங்களை நீலச் சதுரமுள்ள கூடையிலும் விழச் செய்யுமாறு குழந்தைகள் பணிக்கப்பட்டன. இந்தச் சோதனையில் இரு மொழியினர் ஒற்றை மொழியினரை விட விரைவாகவும் திறமையுடனும் செயல்பட்டனர். நிற முரண்பாட்டினால் அவர்கள் குழம்பிவிடவில்லை.
இத்தகைய சோதனைகள் மூலம் கிடைத்த தரவுகள் இரு மொழித் திறன் மூளையின் நிர்வாகத் திறனை மேம்படுத்துவதாகக் காட்டுகின்றன. மூளையின் நிர்வாகச் செயல் பகுதி திட்டமிடுதல், பிரச்னைக்குத் தீர்வு காணல், சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய பணிகள் போன்றவற்றை நிகழ்த்தத் தேவையான கவனக் குவிப்பு ஆணைகளை வெளியிடுகிறது. ஒரு பணியில் முனைந்திருக்கையில் கவனத்தைத் திசை திருப்பும் புறக்காரணிகளைப் புறந்தள்ளிச் செய்து கொண்டிருக்கும் பணியில் கவனத்தைக் குவிக்க வேண்டியிருக்கும். ஒரே சமயத்தில் இரண்டு பணிகளை மாற்றி மாற்றிச் செய்ய நேரிடும்போது, ஒரு பணிக்கான தரவுகளை மனதில் தேக்கி வைத்துக்கொண்டு மற்ற பணியைச் செய்ய வேண்டியிருக்கும்.
எடுத்துக்காட்டாக, ஒரு சாலையில் காரை ஓட்டிச் செல்பவர் கண்ணெதிரில் தெரியும் காட்சிகளைக் கண்காணித்தவாறே, எந்தச் சாலைச் சந்திப்பில், எந்தத் திசையில் திரும்ப வேண்டும் என்பன போன்ற தரவுகளையும் நினைவில்கொண்டு வந்து கொண்டேயிருக்க வேண்டும். இதற்கான செயல்முறைகளை மூளையின் நிர்வாக ஆணையம் வகுத்து வழிகாட்டுகிறது. இரு மொழித் திறன் அந்த ஆணையத்தை வலுவானதாக ஆக்குகிறது.
திசை திருப்பும் புறக்காரணிகள் தணிக்கப்பட வேண்டாத சூழ்நிலைகளில்கூட இரு மொழியர்கள் அதிகச் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். ஒரு சோதனையில் ஒரு தாளில் எண்கள் அள்ளித் தெளித்தாற்போல எழுதப்பட்டிருந்தன. குழந்தைகள் ஒன்றிலிருந்து ஆரம்பித்து ஏறு வரிசையில் எண்களைக் கோடு போட்டு இணைக்கப் பணிக்கப்பட்டன. இதிலும் இரு மொழியர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர்.
இரு மொழியர்கள் சுற்றுச்சூழலைத் தொடர்ந்து கணிக்க வேண்டியிருக்கிறது. உதாரணமாகப் பல மொழிகள் புழங்கும் ஹைதராபாத் போன்ற நகரில் வாழும் ஒரு தமிழ்க் குழந்தை தன் பெற்றோரிடம் தமிழிலும், ஆயாவுடன் தெலுங்கிலும் பேச வேண்டியிருக்கும்.
வெளியே சென்றால் சிலரிடம் ஆங்கிலத்திலும் வேறு சிலருடன் உருது மொழியிலும் உரையாட வேண்டியிருக்கும். காரோட்டி சாலையிலேற்படும் காட்சி மாற்றங்களைத் தொடர்ந்து கணிக்க வேண்டியிருப்பதைப்போலவே அக் குழந்தையும் சுற்றுவட்டாரத்தின் மாற்றங்களைத் தொடர்ந்து கணிக்க வேண்டியிருப்பதாக ஆல்பர்ட் கோஸ்டா என்ற ஆய்வர் கூறுகிறார். இப் பயிற்சி அக்குழந்தையின் மூளையிலுள்ள கண்காணிப்புப் பகுதி குறைந்த உழைப்பில் அதிகச் செயலுறு திறனுடன் இயங்கச் செய்வதாக அவர் விவரிக்கிறார்.
இரு மொழித் திறன் சிசுப் பருவம் முதல் முதுமை வரை மூளையில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரு மொழிச் சூழலில் வளர்ந்து, பின்னர் ஒரு இரண்டாவது மொழியைக் கற்றுக் கொள்கிறவர்களிடமும் இவ்வாறான தாக்கத்தைக் காண முடிகிறது.
2009-ம் ஆண்டில் ஆக்னஸ் கோவாக்ஸ் என்ற இத்தாலிய ஆய்வர் இரு மொழி பேசும் குடும்பங்களிலிருந்தும் ஒற்றை மொழி பேசும் குடும்பங்களிலிருந்தும் ஏழு மாதக் குழந்தைகளைத் திரட்டி ஒரு சோதனை செய்தார். ஒரு பெரிய கணினித் திரையின் முன்னால் அவர்களை இருத்தினார். ஒரு மணியை ஒலித்ததும் திரையின் வலது மேல் கோடியில் ஒரு பொம்மை தோன்றும்படி செய்தார்.
சிலமுறை இவ்வாறு செய்தபின் எல்லாக் குழந்தைகளும் மணியடித்ததும் தலையைத் திருப்பித் திரையின் வலது கோடியைப் பார்த்துப் பொம்மை தோன்றுவதை ரசித்தன. அடுத்த கட்டத்தில் மணியடித்ததும் பொம்மை திரையின் இடது கீழ்க் கோடியில் மாறித் தோன்றியது. இரு மொழிக் குடும்பக் குழந்தைகள் உடனடியாகப் பார்வையைத் திசை மாற்றிச் செலுத்தப் பழகி விட்டன. ஒரு மொழிக் குடும்பக் குழந்தைகளுக்கு அது பிடிபடவேயில்லை.
இரு மொழித் திறனின் அனுகூலங்கள் முதுமையிலும் நீடிப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. டாமர் கோலான் என்ற அமெரிக்க நரம்பு உளவியல் ஆய்வர் ஆங்கிலமும் ஸ்பானிஷ் மொழியும் அறிந்த முதியவர்களை ஆய்வு செய்து அவர்கள் ஒற்றை மொழியினரை விடத் தாமதமாகவே மறதி நோயினால் பீடிக்கப்படுவதாகக் கண்டுபிடித்திருக்கிறார். மொழித் தேர்ச்சி கூடக்கூட இந்த நற்பலன்கள் அதிகமாகின்றன.
First Published : 06 Apr 2012 01:01:02 AM IST
Sunday, 15 April 2012
தேசம் பாதுகாப்பாக இருக்கிறதா?
நம் பீரங்கிகளுக்கு வெடிகுண்டு இல்லை, ஆயுதங்கள் பழையவை, ராணுவம் போர் செய்யும் தயார் நிலையில் இல்லை என்கிறார் தலைமைத் தளபதி. உண்மை என்ன? நமது ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் விஜய்குமார் சிங், அதிரடித் தாக்குதல் நடத்தும் கமோண்டோ பயிற்சி பெற்ற முதல் இந்தியப் படைத்தலைவர். எதிர்பாராத நேரத்தில் குண்டு வீசி எதிரியை அழிக்கும் முறைகளுக்கான பயிற்சியில் சிறந்து விளங்கியதற்காகப் பதக்கம் பெற்றவர். சென்ற வாரம் அவர் வீசிய குண்டுகளினால் தேசமே அதிர்ந்து போயிற்று. முதலில் அவர் வீசிய குண்டு: "எனக்கு 14 கோடி லஞ்சம் கொடுக்க முயற்சிக்கப்பட்டது. அதைக் குறித்து ராணுவ அமைச்சரிடம் சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்ற புகார். இந்தக் குண்டின் தீ மீடியாவில் பற்றி எரிந்தாலும் விவரம் தெரிந்தவர்கள் அதைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. ராணுவத் தளவாடங்கள் வாங்குவதில் ஊழல் என்பது புதிதா என்ன என்ற நினைப்பும், ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றம் கூடும்போதும், ஏதாவது சர்ச்சையைக் கிளப்பி அதை முடக்குவது என்பது எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்ல, மீடியாக்களுக்கும் வாடிக்கை என்ற சலிப்பும் அதற்குக் காரணம், ஆனால் அந்தத் தீ அடங்குவதற்குள் அடுத்த குண்டு வந்து விழுந்தது. "நமது ராணுவம் மிக மோசமான நிலையிலிருக்கிறது. நமக்குத் தேவையான ஆயுதங்களும் இருக்கும் பீரங்கிகளுக்கு போதுமான வெடிமருந்துப் பொருட்களும் இல்லை. ராணுவம் ஒரு போரை சந்திக்கும் தயார் நிலையில் இல்லை" என்ற அந்தக் குண்டுதான் திடுக்கிட வைக்கிறது, தலைமைத் தளபதியின் இந்தக் கூற்றை அலட்சியப்படுத்த இயலாததற்கு அவரின் பின்னணியும் ஒரு காரணம். வி.கே. சிங்கின் குடும்பம் மூன்று தலைமுறைகளாக ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. அவரது தாத்தா, அப்பா ஆகியோர் இந்திய ராணுவத்தில் அதிகாரிகளாகப் பணிபுரிந்தவர்கள். அவர் ராணுவப் பள்ளியில் படித்தபோதும், பின் பணியாற்றிய இடங்களிலும் தன் திறமையால் தனி இடம் பெற்றவர். முதலில் அதிகாரியாகப் பணியில் சேர்ந்த ரஜபுத்திர ரெஜிமெண்ட்டுக்கே பின்னாளில் கமாண்டரான பெருமை பெற்றவர். அமெரிக்காவின் மிகச் சிறந்த போர்ப்பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டபோது அதில் முதல் மாணவராக தேர்வு பெற்று கல்லூரியில் நிரந்தரமாக நிறுவப்படும் பெயர்ப் பட்டியலில் இடம் பெற்றவர். இத்தகைய கௌரவத்தைப் பெற்ற முதல் இந்தியரும் இவரே. இத்தனை சிறப்பு வாய்ந்த ஓர் உயர் அதிகாரி ராணுவத்தை குறைத்துப் பேச நியாயமில்லை. ஆனால் அவர் அப்படிச் சொல்கிறார் என்றால் என்ன காரணம்? தவறாகப் பதிவு செய்யப்பட்ட தன் பிறந்த தேதியை மாற்ற எடுத்துக்கொண்ட முயற்சிகளில் தோல்வியடைந்து ஓராண்டு பதவி நீட்டிப்பை இழந்ததனால் (பார்க்க: பெட்டிச் செய்தி) வெறுப்புற்ற சிங், இப்படி ஒரு கடிதத்தை எழுதி அரசை தர்மசங்கடத்திற்குள்ளாக்குகிறாரா? அப்படிச் சொல்லிவிடுவதற்கில்லை. ஏனெனில் கடிதம் எழுதப்பட்டது மார்ச் 12ம் தேதி. பிரதமருக்கு கடிதம் எழுதுவதற்கு ஒரு மாதம் முன்னரே, பாதுகாப்பு அமைச்சருக்கு இந்த நிலைமையைப் பற்றி ஒரு கடிதமும் எழுதியிருக்கிறார் ஜெனரல் வி.கே.சிங். பின் தனது உதவியாளர்களுடன் சென்று ஒரு பிரசன்டேஷனும் செய்திருக்கிறார். அதற்குப் பதிலோ, நடவடிக்கைகளோ இல்லாததால் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். "இது ராணுவ நடைமுறையில் இருக்கும் ஒரு விஷயம். தான். இதற்கு முன்பும் ராணுவத் தளபதிகள், பிரதமருக்கு கடிதங்கள் எழுதியிருப்பதை நான் அறிவேன். இப்படி பிரதமருக்கு தெரிவிக்க வேண்டியது அவரது கடமைகளில் ஒன்று. எனக்கு முன்பிருந்த தலைமை அதிகாரிதான் பதவியிலிருந்து ஓய்வு பெறும் முதல் நாள் இப்படி ஒரு கடிதத்தை அன்றைய பிரதமருக்கு எழுதியிருக்கிறார்" என்கிறார் முன்னாள் கடற்படைத்தலைவர் விஷ்ணு பாகவத். மே மாதம் ஓய்வு பெறவிருக்கும் சிங், இத்தனை நாள் இல்லாமல் மார்ச் மாதம் ஏன் இப்படி ஒரு கடிதம் எழுதுகிறார்? மார்ச் முதல் வாரத்தில் மிக ரகசியமாக திட்டமிடப்பட்டு இந்திய-சீன எல்லைப் பகுதியில் சீனா ஒரு போர் ஒத்திகை நிகழ்த்தியது. இத்தகைய ஒத்திகைகள் ராணுவத்தில் வழக்கமான விஷயம்தான் என்றாலும், அதைக் கூர்ந்து கவனித்த நமது ராணுவம் நம் தேவைகளை உணர்ந்து உடனடியாகச் செயலில் இறங்கியது. அதன் தொடர்பாக எழுதப்பட்டதுதான் இந்தக் கடிதமும். இந்த ரகசியக் கடிதம் எப்படி வெளியானது என்பதை அரசு ஆராய்ந்து கொண்டிருக்கிறது. ஒரு குடிமகனாக நம்முடைய கவலை எல்லாம் அந்தக் கடிதத்தில் சொல்லப்பட்டிருப்பதெல்லாம் உண்மையா என்பதுதான். என்ன சொல்கிறது அந்தக் கடிதம்? அந்தக் கடிதத்தில் சொல்லப் பட்டிருக்கும் முக்கியமான மூன்று விஷயங்கள்... 1. நமது முக்கியப் படைப் பிரிவுகளான இயந்திர மயமாக்கப்பட்ட தரைப்படை, விமானத் தாக்குதலை சமாளிக்கும் படை, சிறப்புப் படை மற்றும் சிக்னல் பிரிவு போன்றவற்றின் நிலைமை மிக அபாயகரமாகயிருக்கிறது. 2. நமது பீரங்கிப்படை முழுவதற்கும் எதிரிகளின் பீரங்கிகளை அழிக்கத் தேவையான வெடிகுண்டுகள் இல்லை. விமானத் தாக்குதலை சமாளிக்கும் ஆயுதங்களில் 97 சதவிகிதம் பழசாகி விட்டன. அவை தங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை வீரர்களுக்குத் தரவில்லை. 3. நமது தரைப் படையில் நிறைய குறைபாடுகளும், இரவு நேரத்தில் போரிடப் போதுமான ஆயுதங்களும் இல்லாத நிலை நீடிக்கிறது. சிறப்புப் படையினருக்கு அத்தியவாசியத் தேவையான ஆயுதங்கள் மிக மிகக் குறைந்த அளவிலேயிருக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் நமது ராணுவம் தயார் நிலையில் இல்லை. இது உண்மைதானா? இதற்கு அமைச்சர் நேரடியாகப் பதில் தர மறுக்கிறார். கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயங்களின் தன்மையே அது பற்றிய பொது விவாதம் தேச நலனுக்கு உகந்ததல்ல என்பதை உணர்த்தும் என்று நாடாளுமன்றத்தில் சொல்லிவிட்டார் அமைச்சர். அமைச்சர் விவரமாகப் பாராளுமன்றத்தில் பதிலளிக்காத முடியாத இந்தப் பிரச்சினையின் உண்மை நிலை என்ன? நமது ராணுவம் தயார் நிலையில் இல்லையா? படை வீரர்களிடம் உண்மையிலேயே நல்ல ஆயுதங்கள் இல்லையா? இந்த அரசு தேசப் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்து கொண்டிருக்கிறதா என்று ஒரு குடிமகனுக்கு எழும் சந்தேகங்களை ‘புதிய தலைமுறை’ ஆராய்ந்தது. எங்களுக்குக் கிடைத்த தகவல்கள் இவை: சீனாவிற்கு அடுத்த நிலையில் உலகிலேயே இரண்டாவது பெரிய ராணுவம் இந்தியாவுடையது. 3 கோடி பேர்களுக்கு மேல் பணியாற்றும் இந்த ராணுவத்தை நிர்வகிப்பது எளிதான விஷயமல்ல. ஆனால் பாகிஸ்தான், சீன அரசுகளைவிட திறம்பட ராணுவத்தை நிர்வகிக்கிறது என்கிறது உலகின் பல நாட்டு ராணுவங்களைப் பற்றி ஆராயும் ஒரு பிரான்ஸ் ஆராய்ச்சி நிறுவனம். ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோம்மில் சர்வதேச அமைதிப் பணிகளின் ஆராய்ச்சி மையம் (Stockholm International Peace Research Institute) சுருக்கமாக SIPRI ஒன்று உள்ளது. ஏன் உலகின் பல நாடுகள் ஆயுதங்களை வாங்கிக் குவித்து உலக அமைதியை கேள்விக்குறியாகவே வைத்திருக்கிறது என்பதை ஆராயும் அமைப்பு இது. இதன் 2010ம் ஆண்டறிக்கை உலகிலேயே ஆயுத இறக்குமதியில் முதலிடம் வகிப்பது இந்தியா, அடுத்த இடம் சீனாவிற்கு என்கிறது. உலக ஆயுத உற்பத்தியில் பத்து சதவிகிதத்தை இந்தியா வாங்குகிறது. 2010ம் ஆண்டு மட்டும் அதற்கு முந்தைய ஆண்டை விட 28 சதவிகித பட்ஜெட்டில் ஒதுக்கி, 139 லட்சம் கோடிகள் ராணுவத்திற்காகச் செலவிடப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டுகிறது அந்த அறிக்கை. இந்தியா வாங்கியிருக்கும் நவீன ஆயுதங்களைப் பட்டியலிடும் இந்த அறிக்கை அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய ராணுவம் 200 மில்லியன் டாலர் செலவிட்டு அதிவேகப் போர் விமானங்கள், கடற்படை ரேடார்கள் போன்றவைகளை வாங்கி மிகவும் நவீனமடைந்து ஆசியாவிலேயே வலிமை மிகுந்த, அண்டை நாடான சீனாவிற்குச் சவால் விடும் அளவிற்கு வளர்ந்துவிடும் எனக் கணித்திருக்கிறது. ஆண்டுதோறும் ராணுவத்திற்குப் பெரிய பட்ஜெட்டை ஒதுக்கி, பெருமளவில் ஆயுதங்கள் வாங்கப்பட்டிருப்பது உண்மையானால் ராணுவத்தின் தலைமை அதிகாரி ஏன் ஒரு கருத்தைச் சொல்கிறார்? எங்கே போயிற்று பணம் அல்லது வாங்கிய ஆயுதங்கள்? நமது ராணுவத்தின் மிகப் பெரிய பிரச்சினை ஆயுதங்கள் மட்டுமல்ல, ராணுவ அமைச்சகத்தின் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் ஏற்படுத்தும் நடைமுறைச் சிக்கல்களும்தான். தேவையானது எனத் தெரிந்தும் முடிவெடுப்பதில் தாமதம், முடிவெடுத்தபின் ஆர்டர் கொடுக்க நிறுவனங்களை பட்டியலிடுவதில் தாமதம், கொள்முதல் செய்வதற்குள் கிளம்பும் சட்ட சிக்கல் இப்படி பல மட்டங்களில் பிரச்சினை. பொதுவாக அயல் நாட்டு நிறுவனங்களிடம் கொடுத்த ஆர்டர், ஆயுதமாக டெலிவரியாக 6 மாத காலமாகும். போபர்ஸ் பிரச்சினைக்குப் பின் நம் நாட்டில் மூன்று வருடங்களுக்கு நாம் பீரங்கிகள் வாங்கவில்லை. அதில் 400 மட்டுமே இப்போது செயல்பாட்டில் இருக்கின்றன. தேவையான ஹூவிட்டிஸர் (HOWITZER) ரக பீரங்கிகள் வாங்குவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு சிங்கப்பூர் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்ட ஆர்டர், நீதிமன்ற ஆணையால் நிறுத்தப்பட்டு அந்த நிறுவனம் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டது. காரணம், 2009ல் இந்தியப் படைக்கு ஆயுதங்கள் தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனத்தில் நிகழ்ந்த ஓர் ஊழலில் அந்த சிங்கப்பூர் நிறுவனம் சம்பந்தப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டுதான். இன்று நமது ராணுவம் போராட வேண்டிய முதல் எதிரி, பாதுகாப்புத் துறையில் ஊடுருவியிருக்கும் ஊழல்தான். போபர்ஸ் பிரச்சினைக்குப் பின் இடைத்தரகர்களுக்கு ராணுவக் கொள்முதலில் இடமில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டது. அதனால் ஆயுத சப்ளை செய்யும் உலகின் முக்கிய நிறுவனங்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டு, பொதுத்துறையின் மூலமாக வாங்கப்பட்டது. இது தரகர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. இந்திய ராணுவத்தின் பட்ஜெட் மிகப் பெரியது. மொத்தத் தேவையில் 70 சதவிகிதம் ஆயுதங்களும் தளவாடங்களும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அதனால் ஒவ்வொரு ஆர்டரும் பெரிய அளவில் கொடுக்கப்படுவதால் ஆண்டுதோறும் மிகப் பெரிய அளவில் சர்வதேச நிறுவனங்களுடன் பாதுகாப்புத்துறை வியாபாரம் செய்கிறது. இதனைப் பெற பல வெளிநாட்டு நிறுவனங்கள் முன்னாள் ராணுவ உயர் அதிகாரிகளை ‘லாபியிஸ்ட்கள்’ என்ற பெயரில் அமர்த்தியிருக்கிறது. அவர்கள் அரசியல்வாதிகளுடனும் பாதுகாப்புத்துறையுடனும் தொடர்பிலிருப்பது நாடு அறிந்த சிதம்பர ரகசியம். சர்வ வல்லமை கொண்ட அவர்கள் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். அதிகாரபூர்வமாக 4 சதவிகிதம் முதல் 8 சதவிகிதம் வரை ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களிடம் கமிஷன் பெறும் இவர்கள், தங்கள் வருமானத்தினால் இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் பலமிக்க பணநாயக சக்தியாக வளர்ந்திருக்கிறார்கள். ஜெனரல் வி.கே.சிங் விஷயத்தில் அவர்களின் பங்கு குறித்து அதிகம் பேசப்படுகிறது. ராணுவத்தின் உள்துறை நிர்வாக மற்றும் பணியாளர்கள் கட்டமைப்பை சீராக்கத் திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கும் மிகக் கண்டிப்பான அதிகாரியான சிங்கின் பணிக்காலம் நீடித்தால் தங்கள் வியாபாரத்திற்கு இடையூறு என்று சில நிறுவனங்கள் அவர் வயது விஷயத்தை தகவல் உரிமைப் பிரச்சினையாக்கி மீடியாவினால் அதைப் பெரிதாக்கி அவரை இந்த ஆண்டே ஓய்வு பெறச் செய்ய அல்லது ராஜினாமா செய்யும் நிலைக்குத் தள்ளிவிட்டார்கள். அவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் முயற்சியில் ஒன்றுதான் அவரது ரகசியக் கடிதத்தை கசியச் செய்தது என்கிறார்கள் சில மூத்த ராணுவ அதிகாரிகள். இந்திய ராணுவத்துறையின் பாரம்பரியங்களில் ஒன்று ஊழல். நாட்டின் முதல் ராணுவ அமைச்சர் வி.கே.கே. மேனன் காலத்தில் ஜீப் வாங்குவதில் துவங்கிய ஊழல், கட்சி பேதமில்லாமல் எல்லா ஆட்சிகளிலும் இன்று வரை தொடர்கிறது. இந்திரா காந்தி காலத்தில் சப்மெரீன், ராஜீவ் காலத்தில் போபர்ஸ், ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலத்தில் கார்கில் சவப்பெட்டி, இன்றைய அரசில் ஆதர்ஷ் எனத் தொடர்கதையாக அது நீண்டுகொண்டே போகிறது. அரசியல்வாதிகளுக்கும் இடைத்தரகர்களுக்கும் பணம் காய்க்கும் மரமாக ராணுவத்துறை இருப்பது ஒன்றும் ரகசியமான விஷயம் அல்ல."எனக்கு 14 கோடி ருபாய் லஞ்சம் தர முயற்சிக்கப்பட்டது" என்று ஜெனரல் வி.கே. சிங் சொல்லியிருப்பது அதற்கான பகிரங்க சாட்சியம், அவலத்தின் உச்சகட்டம். "ராணுவப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு வகை லாரி வாகனங்கள் 600 எண்ணிக்கையில் வாங்க ராணுவக்கொள்முதல் துறை பரிந்துரை செய்துள்ள பைலுக்கு நான் ஒப்புதல் அளித்தால் எனக்கு 14 கோடி தரப்படும் எனவும், எனக்கு முன்பிருந்தவர்கள் இதுபோல் வாங்கியிருக்கிறார்கள், இனி வருபவர்களும் வாங்கத்தான் போகிறார்கள், எனவே உங்களுக்கு ஒன்றும் பிரச்சினைவரப்போவதில்லை’ என்று சமீபத்தில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர், தேசத்தின் தலைமை ராணுவ அதிகாரியான என்னிடமே நேரிடையாக வந்து லஞ்சம் வாங்கிக்கொள் எனச் சொன்னபோது திகைத்துப் போய்விட்டேன். உடனடியாக அவரை அறையைவிட்டு வெளியேறச் சொல்லிக் கண்டித்தேன்" என்று அந்தப் பேட்டியில் சொல்லியிருக்கும் ஜெனரல் வி.கே.சிங் தொடர்ந்து சொல்லியிருக்கும் மிக அதிர்ச்சியான விஷயம், "இந்த விஷயத்தை உடனே ராணுவ அமைச்சர் அந்தோனியிடம் நேரடியாக போய்த் தெரிவித்தேன். இரண்டாண்டுகளாகியும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்கிறார் ராணுவத்தின் மீது பரம்பரையாகக் காதல் கொண்ட திறமையான தலைமைத் தளபதி. அமைச்சரோ பொதுவாழ்வில் நேர்மைக்கும் எளிய வாழ்க்கைக்கும் பெயர் பெற்றவர். அப்படியும் நிலைமை இப்படி! இந்த விஷயத்தில் பல கேள்விகள் எழுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த விஷயத்தை இப்போது ஏன், அதுவும் சரியாக பாராளுமன்றம் அமர்விலிருக்கும்போது மீடியாவில் சொல்கிறார்? பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசனைப்படி ஏன் அந்த முன்னாள் அதிகாரியின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவோ அல்லது ஊழல் கண்காணிப்பு அதிகாரிகளிடமோ புகார் தரப்படவில்லை? அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்ட, ராணுவத்தின் கௌரவத்தையே விலை பேசிய விஷயத்தில் அவர் நடவடிக்கை எதுவும் எடுக்காத நிலையில், அவரிடம் தொடர்ந்து அது பற்றிப் பேசவோ அல்லது ஒரு கடிதம் கூட அனுப்பாததன் காரணம் என்ன? நாட்டின் தலைமை ராணுவத் தளபதி என்ற முறையில் வி.கே.சிங்கே துறை ரீதியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது, அவர்கள் முன்னாள் ராணுவ அதிகாரிகளாகயிருந்தால் கூட, நடவடிக்கை எடுத்திருக்க முடியும். ஏன் அதைச் செய்யவில்லை? ஏன் குறைந்தபட்ச நடவடிக்கையான போலீஸ் புகார் கூட கொடுக்கப்படவில்லை? கடந்த 25 ஆண்டுகளில் ஒரு நிறுவனத்திலிருந்து இதுவரை தரமற்ற 7,000 லாரிகள் வாங்கப்பட்டிருப்பதாகச் சொல்லும் ஜெனரல், உடனடியாக அந்த நிறுவனத்தை பிளாக் லிஸ்ட் செய்து கொள்முதலை நிறுத்தக் கட்டளையிட்டிருக்கலாமே? அமைச்சருக்கு எழுத்துமூலம் புகார் அனுப்புவதைத் தவிர்த்து தனக்கு லஞ்சம் தர முயன்றவர் யார் என்பதை விரைவில் அறிவிப்பேன் எனச் சொல்வதின் மூலம் இவரும் ஓர் அரசியல்வாதி ஆகிக் கொண்டிருக்கிறாரா? 14 கோடி ரூபாய் லஞ்சப் பேரம் தன் துறையில் நடக்கிறது என்பது நாட்டின் ராணுவத் தளபதி மூலம் தெரிந்த பின்னரும் ராணுவ அமைச்சர் ஏன் அது எழுத்துமூலம் வரவேண்டும் என்று மெத்தனமாகக் காத்திருக்கவேண்டும்? ராணுவத் தலைமை அதிகாரி தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி ராணுவ அமைச்சக அதிகாரிகளின் போன்களை ஒட்டுக்கேட்கிறார் என்று வந்த அனாமதேயக் கடிதத்தின்மேல் உடனே நடவடிக்கை எடுத்து விசாரணைக்கு உத்தரவிட்ட அமைச்சர் இதில் ஏன் அமைதி காத்தார்? ஜெனரல் வி.கே.சிங் வயது குறித்த பிரச்சினையில் அவர் எழுத்துமூலமாக, பல ஆதாரங்களுடன் தந்திருந்த மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் சாதித்த அமைச்சகம், லஞ்சப் புகார் எழுத்துமூலமாக தெரிவிக்கப்படாததால் எதுவும் செய்யமுடியவில்லை என்று சொல்வதற்குப் பின் என்ன நடந்திருக்கிறது? அடிப்படைத் துறை ரீதியான விசாரணை கூட அவசியமில்லை என்று இரண்டு ஆண்டுகளுக்குக்கும் மேல் ஒதுக்கப்பட்டிருந்த விஷயம், ஊடகங்களில் வெளிவந்த உடனே சி.பி.ஐ.விசாரணைக்கு எவருடைய புகாருமில்லாமல் உத்தரவிடப்பட்டது ஏன்? விசாரணையைத் துவக்கிய முதல் நாளிலேயே சி.பி.ஐ. லஞ்சம் தரும் முயற்சி பற்றிய உரையாடல்கள் பதிவு செய்யப்பட்ட டேப்புகள் கிடைத்திருப்பதாகவும் அதன் நம்பகத்தன்மை சோதிக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த டேப் இப்போது எப்படி, எங்கிருந்து சி.பி.ஐ.க்கு கிடைத்தது? இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான கேள்வி: இந்திய பாதுகாப்புத்துறையில் லஞ்சம் என்பது அழிக்கவே முடியாத விஷயமாக நிலை பெற்றுவிட்டதா? இந்தக் கேள்விகளுக்கான நேர்மையான விடையில்தான் இந்தியாவின் பாதுகாப்பு இருக்கிறது. ஆயுதங்களில் மட்டும் அல்ல. பெட்டி செய்தி: பிறந்த தேதி பிரச்சினை
வி.கே.சிங் பிறந்தது 1950ம் வருடமா அல்லது 51ம் வருடமா என்பதுதான் பிரச்சினை. அவர் தந்தை ராணுவ அதிகாரியானதால் சிங் பிறந்தது ராணுவ ஆஸ்பத்திரியில். ராணுவ விதிகளின்படி குழந்தைகளின் பிறந்தநாள் அதிகாரிகளின் சர்வீஸ் ரெக்கார்டுகளில் குறிக்கப்படும். அப்படி குறிக்கப்பட்டிருக்கும் வருடம் 1951. ஆனால் 14 வயதில் நேஷனல் டிபன்ஸ் அகாதெமியின் நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் வி.கே.சிங்தனது பிறந்த வருடத்தை 1951 என எழுதிவிட்டார். அங்கு படிப்பு முடிந்து வெளிவரும் முன்னரே அவரது தந்தை தனது சர்வீஸ் ரெக்கார்டுகளுடன் மனு செய்து அந்தத் தவறைத் திருத்திவிட்டார். ஆனால் சிங் ராணுவத்தில் சேரும்போது முதலில் பதிவு செய்யப்பட்ட தேதியான 1951தான் பள்ளியிலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறது. பள்ளி இறுதியாண்டு சான்றிதழில் 1950. ஆனால் மற்றதில் 1951. ஜெனரலாக பதவி ஏற்றபோது தனது பதவிக்காலம் 2013 வரை என எண்ணியிருந்தவருக்கு 2012 வரைதான் எனச் சொல்லப்பட்டது. சரியான வயதைப் பதிவு செய்ய மனு செய்த வி.கே.சிங்கிற்கு ராணுவ ரெக்கார்டுகளில் பிறந்த தேதி மாற்றம் செய்யப்படுவதில்லை எனற விதி சுட்டிக் காட்டப்பட்டு நிராகரிக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சகம் இவரது மேல்முறையீட்டு மனுக்களை ஏற்கவும் இல்லாமல் நிராகரிக்கவும் இல்லாமல் காலம் கடத்தியது. அதனால் நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். முந்திய பதவி உயர்வுகளைப் பதிவு செய்யப்பட்ட பிறந்த ஆண்டின் அடிப்படையில் ஏற்றுக்கொண்டு இப்போது பிரச்சினை எழுப்புவதால் உச்ச நீதிமன்றம் வழக்கை ஏற்க மறுத்து விட்டது. எனக்கு பதவி நீட்டிப்பு எதுவும் வேண்டாம். அரசு ஆணைப்படி நான் ஓய்வு பெற்றுக்கொள்கிறேன். ஆனால் இது என் நேர்மை சம்பந்தப்பட்ட விஷயம். என் வயது தவறாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதை ராணுவம் ஒப்புக்கொண்டால் மட்டும் போதும் என்று கேட்டபோது நீதிமன்றம் அந்த வேண்டுகோளை ஏற்க மறுத்துவிட்டது.
ரமணன்( புதிய தலைமுறை ) |
Thursday, 12 April 2012
Right To Education A Fundamental Right : Supreme Court
|
Wednesday, 11 April 2012
இரண்டாம் பசுமைப் புரட்சி
தமிழ்நாட்டில் இரண்டாம் பசுமைப் புரட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 13 முதல் அனைத்து வருவாய் கிராமங்களிலும் உழவர் பெருவிழா நடத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

Friday, 6 April 2012
National Maritime Day celebrated in Tuticorin
Sailors who sacrificed their lives honoured(from the hindu daily)

V.O. Chidambaranar Port Trust, Tuticorin, celebrated the 49th National Maritime Day on its premises here on Thursday. The programme commenced with honouring of sailors, who sacrificed their lives.
In recognition of sacrifices made by sailors in the days of yore, A. Subbiah, Chairman of the Port, placed wreaths at the sailors' memorial at Zone – B and a two minute silence was also observed. Then, Mr. Subbiah arrived at Zone – A in the eighth berth of the Port and took salute as four boats, including two pilot launchers and a couple of tug boats, sailed past the venue. After having received the salute from sailors at the helm of the tug vessels, Mr. Subbiah lauded the role of sailors.
Many families of the Port officials, employees and other workers turned out to watch the event. Besides, competitions like tug of war between the port officials and port users were held, in which the port officials won. Apart from this, pot breaking event was also organized. As part of the celebrations, the students of Harbour School competed in cricket and swimming besides an essay writing competition. The winners were given prizes.
Saturday, 31 March 2012
My district Port Site
http://www.vocport.gov.in/
V.O.Chidhamabaranar
Newly enhanced Thoothukudi's V.O.Chidhamabaranar Port Trust.
V.O.Chidhamabaranar
Monday, 26 March 2012
தமிழக பட்ஜெட் 2012 முக்கிய அம்சங்கள்
தமிழக பட்ஜெட் 2012 முக்கிய அம்சங்கள்
தமிழக பட்ஜெட்டில் ரூ. 1500 கோடிக்குப் புதிய வரிகள்
ஆதி திராவிட மாணவர் விடுதிகளில் மாணவர்களுக்கு கட்டில் வசதி
ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு ரூ. 740 கோடி ஒதுக்கீடு
7000 கிராமங்களில் குடிநீர் வசதியை மேம்படுத்த சிறப்புத் திட்டம்
சென்னை பெருநகர வளர்ச்சிக்கு ரூ. 500 கோடி
மதுரை மாநகராட்சியில் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 250 கோடி
மாணவர்களுக்கு ஜியாமெட்ரி பாக்ஸ், ஸ்கேல், பென்சில், அட்லஸ் உள்ளிட்டவையும் இலவசமாக வழங்கப்படும்
1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படும்
கிராமப்புற பெண்களுக்கு விலையில்லா நாப்கின்கள் வழங்க ரூ. 55 கோடி ஒதுக்கீடு
மதுரை, கோவையில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும்
அண்ணா, எம்.ஜி.ஆர். நினைவிடங்களைப் புதுப்பிக்க ரூ. 6.83 கோடி
தமிழறிஞர்களுக்கு கபிலர், உ.வே.சா விருது
தமிழ் ஆராய்ச்சிக்கு ரூ. 1 கோடி ஒதுக்கீடு
புதிய காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ. 750 கோடி ஒதுக்கீடு
மருத்துவத் துறைக்கு ரூ. 5569 கோடி
பழனி, ஸ்ரீரங்கம் கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம்-புதிய திட்டம்
1006 கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறை மூலம் புதுப்பிக்கப்படும்
மேலும் 50 கோவில்களுக்கு திருக்கோவில் அன்னதானத் திட்டம் விரிவுபடுத்தப்படும்
கோவில் சொத்துக்களை மீட்கர நடவடிக்கை எடுக்கப்படும்
தானே புயல் பாதித்த பகுதிகளில் மின் கட்டமைப்பை சீரமைக்க ரூ. 300 கோடி ஒதுக்கீடு
ரூ. 8000 கோடியில் உடன்குடி மின் திட்டம் செயல்படுத்தப்படும்
உடன்குடி திட்டத்திற்கு ரூ. 1500 கோடி ஒதுக்கீடு
வெளி மாநிலத்திலிருந்து மின்சாரம் கொண்டு வர வழியில்லை
புதிய பேருந்துகள் வாங்க ரூ. 508 கோடி நிதி
அனைத்துப் அரசு பஸ்களிலும் மின்னணு பயணச்சீட்டு வழங்கும் முறை அமல்
மோனோ ரயில் திட்டத்தில் 4வது வழித்தடமாக வண்டலூர்-புழல் இணைக்கப்படும்
மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ. 250 கோடி ஒதுக்கீடு
விரைவில் சென்னையிலும் அரசு கேபிள் சேவை
2வது கட்ட சென்னை புற வழிச் சாலை மேம்பாட்டுத் திட்டம்- மாநில அரசே நிறைவேற்றும்
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொழிற்பேட்டைகளுக்கு மாற்றப்படும்
ரூ. 20 ஆயிரம் கோடியில் புதிய முதலீடுளை ஈர்க்க புதிய திட்டம்
பிளாஸ்டிக் சாலைகள் அமைக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு
உணவு மானியத்திற்கு ரூ. 4900 கோடி ஒதுக்கீடு
துவரை உள்ளிட்ட பருப்புகள் சலுகை விலையில் தரப்படும்
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும்
ரூ. 50 கோடியில் விலைக் கட்டுப்பாட்டு நிதியம்
3 ஆண்டுகளில் 3307 ஏரிகள் மேம்படுத்தப்படும்
காண்டூர் கால்வாய் திட்டம் 2013 ஆகஸ்ட்டில் நிறைவடையும்
காவிரி உள்ளிட்ட நதி நீர்ப் பிரச்சினைகளில் தமிழக உரிமை பாதுகாக்கப்படும்
நதி நீர் இணைப்புக்கு ரூ. 50 கோடி ஒதுக்கீடு
அணைகளை மேம்படுத்த ரூ. 50 கோடி
விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ. 4000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும்
49 விரைவு நீதிமன்றங்கள் நிரந்தர நீதிமன்றங்களாக்கப்படும்.
2012-13ல் 1 லட்சம் வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்படும்
விவசாயிகளின் வட்டி்ச சலுகைக்கு ரூ. 160 கோடி ஒதுக்கீடு
சங்கரன்கோவில், விழுப்புரத்தில் கறிக்கோழி, முட்டைக் கோழி வளர்ப்பு ஊக்குவிப்புத் திட்டம்
கால்நடை பராமரிப்புத் துறைக்கு ரூ. 814.03 கோடி ஒதுக்கீடு
ரூ. 244 கோடியில் 12,000 பேருக்கு கறவைப் பசுக்கள், 1.5 லட்சம் பெண்களுக்கு தலா 4 வெள்ளாடு அல்லது செம்மறியாடு
நெல்லுக்கு ஊக்கத் தொகை வழங்க ரூ.200 கோடி
10 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவர்
ஓட்டுப் பயிற்சிப் பள்ளி அமைக்க ரூ. 15 கோடி ஒதுக்கீடு
நீதித்துறை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ. 736 கோடி
வேளாண்துறைக்கு ரூ.3804.96 கோடி ஒதுக்கீடு
சாலைப் பாதுகாப்பு நிதி ரூ. 65 கோடி உயர்வு
டி.கல்லுப்பட்டி, ஆலங்குளம், சின்னசேலத்தில் புதிய தீயணைப்பு நிலையங்கள்
தீயணைப்புத் துறைக்கு ரூ. 197.58 கோடி ஒதுக்கீடு
ரூ.400 கோடியில் 4340 கூடுதல் காவலர் குடியிருப்புகள் அமைக்கப்படும்
சென்னை போக்குவரத்துக் காவலுக்கு 87 கூடுதல் ரோந்து வாகனங்கள் ஒதுக்கீடு
சென்னையில் ரூ. 150 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மைத் திட்டம்
ரூ. 20.75 கோடியில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு
நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க 25 சிறப்பு நீதிமன்றங்கள்
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரூ. 22.49 கோடியில் லேப்டாப், பிரிண்டர்கள் வழங்கப்படும்
ரூ. 1.93 கோடியில் தனியார் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்க அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட உதவி மையங்கள்
பேரிடர்களை சமாளிக்க சிறப்புப் பயிற்சி பெற்ற அமைப்பு உருவாக்கப்படும்.
தமிழ்நாடு கட்டமைப்பு வாரியம் அமைக்க விரைவில் சட்டத் திருத்தம்
தானே புயல் பாதித்த கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் வீடுகள் கட்ட ரூ. 1000 கோடி ஒதுக்கீடு
பட்ஜெட் உரையைப் புறக்கணித்து திமுக வெளிநடப்பு
தொடர்ந்து 5 நிமிடம் ஜெயலலிதாவைப் பாராட்டி புகழ் மாலை 'பாடினார்' ஓ.பன்னீர் செல்வம்!
சங்கரன்கோவில் வெற்றி: ஜெயலலிதாவை பாராட்டி சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் நீண்ண்ண்ண்ட நேரம் மேசைத் தட்டு!
ஆதி திராவிட மாணவர் விடுதிகளில் மாணவர்களுக்கு கட்டில் வசதி
ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு ரூ. 740 கோடி ஒதுக்கீடு
7000 கிராமங்களில் குடிநீர் வசதியை மேம்படுத்த சிறப்புத் திட்டம்
சென்னை பெருநகர வளர்ச்சிக்கு ரூ. 500 கோடி
மதுரை மாநகராட்சியில் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 250 கோடி
மாணவர்களுக்கு ஜியாமெட்ரி பாக்ஸ், ஸ்கேல், பென்சில், அட்லஸ் உள்ளிட்டவையும் இலவசமாக வழங்கப்படும்
1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படும்
கிராமப்புற பெண்களுக்கு விலையில்லா நாப்கின்கள் வழங்க ரூ. 55 கோடி ஒதுக்கீடு
மதுரை, கோவையில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும்
அண்ணா, எம்.ஜி.ஆர். நினைவிடங்களைப் புதுப்பிக்க ரூ. 6.83 கோடி
தமிழறிஞர்களுக்கு கபிலர், உ.வே.சா விருது
தமிழ் ஆராய்ச்சிக்கு ரூ. 1 கோடி ஒதுக்கீடு
புதிய காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ. 750 கோடி ஒதுக்கீடு
மருத்துவத் துறைக்கு ரூ. 5569 கோடி
பழனி, ஸ்ரீரங்கம் கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம்-புதிய திட்டம்
1006 கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறை மூலம் புதுப்பிக்கப்படும்
மேலும் 50 கோவில்களுக்கு திருக்கோவில் அன்னதானத் திட்டம் விரிவுபடுத்தப்படும்
கோவில் சொத்துக்களை மீட்கர நடவடிக்கை எடுக்கப்படும்
தானே புயல் பாதித்த பகுதிகளில் மின் கட்டமைப்பை சீரமைக்க ரூ. 300 கோடி ஒதுக்கீடு
ரூ. 8000 கோடியில் உடன்குடி மின் திட்டம் செயல்படுத்தப்படும்
உடன்குடி திட்டத்திற்கு ரூ. 1500 கோடி ஒதுக்கீடு
வெளி மாநிலத்திலிருந்து மின்சாரம் கொண்டு வர வழியில்லை
புதிய பேருந்துகள் வாங்க ரூ. 508 கோடி நிதி
அனைத்துப் அரசு பஸ்களிலும் மின்னணு பயணச்சீட்டு வழங்கும் முறை அமல்
மோனோ ரயில் திட்டத்தில் 4வது வழித்தடமாக வண்டலூர்-புழல் இணைக்கப்படும்
மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ. 250 கோடி ஒதுக்கீடு
விரைவில் சென்னையிலும் அரசு கேபிள் சேவை
2வது கட்ட சென்னை புற வழிச் சாலை மேம்பாட்டுத் திட்டம்- மாநில அரசே நிறைவேற்றும்
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொழிற்பேட்டைகளுக்கு மாற்றப்படும்
ரூ. 20 ஆயிரம் கோடியில் புதிய முதலீடுளை ஈர்க்க புதிய திட்டம்
பிளாஸ்டிக் சாலைகள் அமைக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு
உணவு மானியத்திற்கு ரூ. 4900 கோடி ஒதுக்கீடு
துவரை உள்ளிட்ட பருப்புகள் சலுகை விலையில் தரப்படும்
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும்
ரூ. 50 கோடியில் விலைக் கட்டுப்பாட்டு நிதியம்
3 ஆண்டுகளில் 3307 ஏரிகள் மேம்படுத்தப்படும்
காண்டூர் கால்வாய் திட்டம் 2013 ஆகஸ்ட்டில் நிறைவடையும்
காவிரி உள்ளிட்ட நதி நீர்ப் பிரச்சினைகளில் தமிழக உரிமை பாதுகாக்கப்படும்
நதி நீர் இணைப்புக்கு ரூ. 50 கோடி ஒதுக்கீடு
அணைகளை மேம்படுத்த ரூ. 50 கோடி
விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ. 4000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும்
49 விரைவு நீதிமன்றங்கள் நிரந்தர நீதிமன்றங்களாக்கப்படும்.
2012-13ல் 1 லட்சம் வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்படும்
விவசாயிகளின் வட்டி்ச சலுகைக்கு ரூ. 160 கோடி ஒதுக்கீடு
சங்கரன்கோவில், விழுப்புரத்தில் கறிக்கோழி, முட்டைக் கோழி வளர்ப்பு ஊக்குவிப்புத் திட்டம்
கால்நடை பராமரிப்புத் துறைக்கு ரூ. 814.03 கோடி ஒதுக்கீடு
ரூ. 244 கோடியில் 12,000 பேருக்கு கறவைப் பசுக்கள், 1.5 லட்சம் பெண்களுக்கு தலா 4 வெள்ளாடு அல்லது செம்மறியாடு
நெல்லுக்கு ஊக்கத் தொகை வழங்க ரூ.200 கோடி
10 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவர்
ஓட்டுப் பயிற்சிப் பள்ளி அமைக்க ரூ. 15 கோடி ஒதுக்கீடு
நீதித்துறை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ. 736 கோடி
வேளாண்துறைக்கு ரூ.3804.96 கோடி ஒதுக்கீடு
சாலைப் பாதுகாப்பு நிதி ரூ. 65 கோடி உயர்வு
டி.கல்லுப்பட்டி, ஆலங்குளம், சின்னசேலத்தில் புதிய தீயணைப்பு நிலையங்கள்
தீயணைப்புத் துறைக்கு ரூ. 197.58 கோடி ஒதுக்கீடு
ரூ.400 கோடியில் 4340 கூடுதல் காவலர் குடியிருப்புகள் அமைக்கப்படும்
சென்னை போக்குவரத்துக் காவலுக்கு 87 கூடுதல் ரோந்து வாகனங்கள் ஒதுக்கீடு
சென்னையில் ரூ. 150 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மைத் திட்டம்
ரூ. 20.75 கோடியில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு
நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க 25 சிறப்பு நீதிமன்றங்கள்
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரூ. 22.49 கோடியில் லேப்டாப், பிரிண்டர்கள் வழங்கப்படும்
ரூ. 1.93 கோடியில் தனியார் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்க அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட உதவி மையங்கள்
பேரிடர்களை சமாளிக்க சிறப்புப் பயிற்சி பெற்ற அமைப்பு உருவாக்கப்படும்.
தமிழ்நாடு கட்டமைப்பு வாரியம் அமைக்க விரைவில் சட்டத் திருத்தம்
தானே புயல் பாதித்த கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் வீடுகள் கட்ட ரூ. 1000 கோடி ஒதுக்கீடு
பட்ஜெட் உரையைப் புறக்கணித்து திமுக வெளிநடப்பு
தொடர்ந்து 5 நிமிடம் ஜெயலலிதாவைப் பாராட்டி புகழ் மாலை 'பாடினார்' ஓ.பன்னீர் செல்வம்!
சங்கரன்கோவில் வெற்றி: ஜெயலலிதாவை பாராட்டி சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் நீண்ண்ண்ண்ட நேரம் மேசைத் தட்டு!
Subscribe to:
Posts (Atom)