http://puthiyathalaimurai.tv/news/tamil/26107
சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி வெற்றி பெற்றுள்ளார்
அவர் மொத்தம் 94 ஆயிரத்து 977 வாக்குகளைப் பெற்றுள்ளார். 2வது இடத்தில் உள்ள திமுக வேட்பாளர் ஜவஹர் சூர்யகுமார் 26ஆயிரத்து 220 வாக்குகளை மட்டுமே பெற்று பின்தங்கி உள்ளார். மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக் குமார் 20 ஆயிரத்து 678 வாக்குகளைப் பெற்று 3 வது இடத்தில் உள்ளார். 12 ஆயிரத்து 144 வாக்குகளைப் பெற்ற தேமுதிக வேட்பாளர் முத்துக்குமார் 4 வது இடத்தில் உள்ளார்.
சங்கரன்கோவில் நகரத்தில் வசதித்து வருபவரான இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. சங்கரன்கோவில் நகரத்தின் 16 வார்டின் அதிமுக பெண்கள் பாசறையின் பொறுப்பாளராக இருந்தவர். பின்னர் கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், சங்கரன்கோவில் நகரமன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் சங்கரன்கோவில் நகரமன்றத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெயரைப் பெற்றார். இந்நிலையில்தான் சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளராக முத்துச்செல்வி, அதிமுக பொதுச்செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் சட்டமன்ற உறுப்பினராகி இருக்கிறார் 28 வயதான முத்துச்செல்வி. இவர் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைளுடன் வாழ்ந்து வருகிறார். இவரது தந்தை சங்கரலிங்கம், இதே தொகுதியில் 1984ல் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
No comments:
Post a Comment